நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

50 அனாதைச் சிறுவர்களுக்கு நிதியுதவியும் அத்தியாவசியப் பொருட்களும் வழங்கல்: டத்தோ டாக்டர் முஸ்தபா

கம்போடியா: 

கம்போடியாவின் எல்லைக் கிராமத்தில் வசிக்கும் 50 ஆதரவற்ற குழந்தைகளுக்கு உதவும் வகையில், சர்வதேசத் தன்னார்வத் தொண்டு நிறுவனத்தின் தலைவர் டத்தோ டாக்டர் முஸ்தபா அஹமத் மரிக்கன் தலைமையில் சிறப்பு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. அங்குள்ள ஒரு சமயப்பள்ளிக்கு முன்பாக நடைபெற்ற இந்த நெகிழ்ச்சியான நிகழ்வில், அனாதைச் சிறுவர்கள் கௌரவிக்கப்பட்டனர்.

இந்தத் திட்டத்தின் கீழ், ஒவ்வொரு சிறுவருக்கும் ரொக்கப் பணமும், அவர்களின் தினசரித் தேவைகளுக்கான அரிசி, சமையல் எண்ணெய் உள்ளிட்ட பல்வேறு அத்தியாவசிய மளிகைப் பொருட்களும் வழங்கப்பட்டன. 

இக்கட்டான சூழலில் வாழும் இச்சிறுவர்களின் வாழ்வாதாரத்தைச் சற்றே மேம்படுத்தும் நோக்கில் இந்த உதவிக்கரம் நீட்டப்பட்டுள்ளது.

நிகழ்வில் உரையாற்றிய முஸ்தபா அவர்கள், முந்தைய ஆண்டுகளை விட இந்த ஆண்டு ஆதரவற்ற குழந்தைகளின் நலனில் கூடுதல் கவனம் செலுத்தித் திட்டங்கள் வகுக்கப்பட்டதாகத் தெரிவித்தார். 

இத்தகைய முயற்சிகள் அக்குழந்தைகளின் வாழ்வில் மகிழ்ச்சியை ஏற்படுத்துவதோடு, அவர்கள் மீதான சமூகத்தின் அக்கறையை வெளிப்படுத்தும் ஒரு பாலமாகவும் அமையும் என அவர் குறிப்பிட்டார்.

இந்த மனிதாபிமானப் பணி, அக்கிராம மக்களின் பாராட்டுக்களைப் பெற்றுள்ளதுடன், பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்குப் பெரும் துணையாகவும் அமைந்துள்ளது.

-கிரித்திக்கா

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset