
செய்திகள் மலேசியா
லாபுவானில் 30 நாட்களுக்கு மேம்படுத்தப்பட்ட நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை அமல்
புத்ராஜெயா:
தொற்றுப் பரவலை கட்டுப்படுத்த ஏதுவாக லாபுவானில் மேம்படுத்தப்பட்ட நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை எனப்படும் 'ஈ.எம்சிஓ' (EMCO) அமல்படுத்தப்பட்டுள்ளது. அங்குள்ள 5 துணைப் பகுதிகளில் புதன்கிழமை முதல் 30 நாட்களுக்கு இந்த நடமாட்டக் கட்டுப்பாடு அமலில் இருக்கும்.
தொற்றுப் பரவல் வேகம் அதிகரித்த காரணத்தினாலேயே லாபுவானில் இந்த நடமாட்டக் கட்டுப்பாடு உடனடியாக அமலுக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தொற்றுப் பரவல் வேகத்தைக் கணக்கிடும் RO (Reproduction number) லாபுவானில் 2.55 ஆக உள்ளது.
2.0க்கும் அதிகமாக இருப்பின் மிகப்பெரிய அளவில் தொற்றுப் பரவல் ஏற்படக்கூடிய ஆபத்து உள்ளதாக நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். எனவே, அனைத்துவித ஆபத்துகளையும் மதிப்பீடு செய்த பிறகு லாபவானில் 'ஈ.எம்சிஓ' (EMCO) அமல்படுத்தப்பட்டுள்ளது என்றும் இதன்மூலம் சமூகப் பரவலை தடுக்க இயலும் என்றும் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
இதற்கிடையே, பெல்டா உமாஸ் சபா (Felda Umas Sabah), கம்போங் பாகோ ஹலேர் (சரவாக்) Kampung Bako Hilir in Sarawak ஆகிய பகுதிகளில் மேம்படுத்தப்பட்ட நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை இன்றோடு முடிவுக்கு வந்தது. முன்னதாக அது நாளை முடிவுக்கு வரும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
தொடர்புடைய செய்திகள்
July 31, 2025, 9:26 pm
இந்திய சமுதாயத்திடையே உருமாற்றத்தை கொண்டு வரும் சக்தி கல்வி யாத்திரைக்கு உண்டு: சுரேன் கந்தா
July 31, 2025, 9:23 pm
ஸ்ரீ முருகன் கல்வி நிலையத்தின் கல்வி யாத்திரையில் 5,000 பேர் கலந்து கொள்வார்கள்: ஸ்ரீ கணேஷ்
July 31, 2025, 4:38 pm
தூக்கத்தில் இருந்து திடீரென விழித்த புவாட் ஹீரோவாக விரும்புகிறார்: டத்தோஶ்ரீ சரவணன் சாடல்
July 31, 2025, 4:22 pm
இடைநிலைப்பள்ளி கல்வியைக் கட்டாயமாக்கிய கல்வியமைச்சருக்கு பாராட்டுகள்: டத்தோ நெல்சன்
July 31, 2025, 2:08 pm
5 வயதிலிருந்து பாலர் பள்ளிக் கல்வியை அரசாங்கம் கட்டாயமாக்கும்: பிரதமர்
July 31, 2025, 2:03 pm
இந்திய சமுதாயத்திற்கான மேம்பாட்டுத் திட்டங்களை மடானி அரசு செயல்படுத்தும்: பிரதமர்
July 31, 2025, 1:35 pm