செய்திகள் மலேசியா
இந்தியா, சிங்கப்பூர் இடையே மீண்டும் பறக்கும் 'வந்தே பாரத்' விமானங்கள்
சிங்கப்பூர்:
இந்தியாவில் இருந்து தினந்தோறும் 25 பயணிகள் விமானம் மூலம் சிங்கப்பூர் வந்தடைகின்றனர் என்று ஊடகத் தகவல் தெரிவிக்கிறது.
இவர்களில் பெரும்பாலானோர் சிங்கப்பூர் குடிமக்கள் மற்றும் நிரந்தர வசிப்பிட உரிமம் பெற்றவர்கள் ஆவர். அதபோல் சிங்கப்பூரில் இருந்து இந்தியாவுக்குத் திரும்பிச் செல்லும் விமானத்தில் நாள்தோறும் சராசரியாக 180 பயணிகள் செல்வதாக தெரியவந்துள்ளது.
இந்திய அரசு வெளிநாடுகளில் சிக்கி உள்ள தனது குடிமக்களை வந்தே பாரத் திட்டத்தின் கீழ் இயக்கப்படும் விமானங்கள் மூலம் திரும்ப அழைத்து வருகின்றன. அந்த வகையில் பல்வேறு நாடுகளுக்கு இந்த விமானங்கள் இயக்கப்பட்டு வருகின்றன.
இந்நிலையில் சிங்கப்பூர் அரசின் அனுமதியுடன் சாங்கி விமான நிலையத்தின் முதலாவது முனையத்தின் மூலம் வந்தே பாரத் விமானங்கள் இயக்கப்படுவது தெரியவந்துள்ளது.
சிங்கப்பூரில் B1617 கொரோனா திரிபு தாக்கம் அதிகரித்து வருவதாகக் கூறப்படும் நிலையில் இந்தச் சிறப்பு விமானங்கள் இயக்கப்படுகின்றன. சாங்கி விமான நிலையத்தில் நூற்றுக்கும் அதிகமான ஊழியர்கள் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அண்மையில், சிங்கப்பூரில் புதிய வகை கொரோனா திரிபு கண்டறியப்பட்டதாகவும் அங்கிருந்து வரக்கூடிய விமானங்களுக்குத் தடை விதிக்க வேண்டும் என்றும் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் வலியுறுத்தி உள்ளார். இத்தகைய பரபரப்பான சூழ்நிலையில் சிங்கப்பூர்-இந்தியா இடையே வந்தே பாரத் விமானங்கள் இயக்கப்படுகின்றன.
தொடர்புடைய செய்திகள்
February 24, 2026, 3:44 pm
மலேசிய சமூக ஒற்றுமை வலுப்பெறுகிறது: தேசிய ஒற்றுமை அமைச்சர் ஆரோன் கூறினார்
February 24, 2026, 2:42 pm
பெனம்பாங்கில் 1.28 மில்லியன் மதிப்பிலான போதைப் பொருள் போலீஸாரால் கைப்பற்றப்பட்டது
February 24, 2026, 12:45 pm
பாச்சோக் கடற்கரையில் 16 பேருக்கு ஜெல்லி மீன் தாக்குதல்: கிளாந்தான் மாநில மீன்வளத்துறை எச்சரித்துள்ளது
February 24, 2026, 12:11 pm
என்ட்ரி மிக்காயல் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது
February 24, 2026, 12:10 pm
ஹரிராயாவை முன்னிட்டு அரசு ஊழியர்களுக்கு RM500 சிறப்பு நிதி உதவி
February 24, 2026, 12:07 pm
புக்கிட் செந்தோசாவில் கலவரம்: 6 ஆண்கள் கைது
February 24, 2026, 11:56 am
“மலேசியா–அமெரிக்கா வர்த்தக ஒப்பந்தம் இன்னும் அமலுக்கு வரவில்லை”: பிரதமர் அன்வார்
February 24, 2026, 10:55 am
47 குற்றச்சாட்டுகளில் முழு விடுதலை கோரி அஹ்மத் ஜாஹித் நீதிமன்றத்தில் ஆஜர்
February 24, 2026, 10:41 am
பள்ளி வளாகங்களில் வேக வரம்பு 50 கிலோமீட்டலிருந்து 30 கிலோமீட்டராக குறைக்க போக்குவரத்து அமைச்சு ஆய்வு
February 24, 2026, 10:38 am
