
செய்திகள் மலேசியா
புதிய உச்சம்: மலேசியாவில் மேலும் 6,976 பேருக்கு கொவிட்-19 தொற்று பாதிப்பு
கோலாலம்பூர்:
மலேசியாவில் இன்று புதிதாக மேலும் 6,976 பேருக்கு கொரோனா கிருமித் தொற்று பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து நாட்டில் பாதிக்கப்பட்டோரின் ஒட்டுமொத்த எண்ணிக்கை 512,091 ஆக அதிகரித்துள்ளது.
வழக்கம்போல் சிலாங்கூரில்தான் அதிக தொற்றுச் சம்பவங்கள் பதிவாகி உள்ளன. அங்கு கடந்த 24 மணி நேரத்தில் 2,235 பேருக்கு கிருமி தொற்றியது. இரண்டாம் இடத்தில் உள்ள சரவாக்கில் 663 பேரும் அடுத்தபடியாக ஜொகூரில் 549 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
ஆகக் குறைவாக பெர்லிஸ் மாநிலத்தில் 8 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், புத்ராஜெயாவில் 30 பேரும் லாபுவானில் 37 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்று 49 பேர் மரணமடைந்ததாகவும், புதிதாக 24 தொற்றுத் திரள்கள் கண்டறியப்பட்டுள்ளதாகவும் சுகாதார அமைச்சின் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இறந்தவர்களில் 48 பேர் மலேசிய குடிமக்கள் ஆவர். ஒருவர் வெளிநாட்டவர். சிலாங்கூரில் அதிகபட்சமாக 14 பேரும், ஜொகூரில் எட்டு பேரும் பலியாகியுள்ளனர்.
தொடர்புடைய செய்திகள்
July 31, 2025, 9:26 pm
இந்திய சமுதாயத்திடையே உருமாற்றத்தை கொண்டு வரும் சக்தி கல்வி யாத்திரைக்கு உண்டு: சுரேன் கந்தா
July 31, 2025, 9:23 pm
ஸ்ரீ முருகன் கல்வி நிலையத்தின் கல்வி யாத்திரையில் 5,000 பேர் கலந்து கொள்வார்கள்: ஸ்ரீ கணேஷ்
July 31, 2025, 4:38 pm
தூக்கத்தில் இருந்து திடீரென விழித்த புவாட் ஹீரோவாக விரும்புகிறார்: டத்தோஶ்ரீ சரவணன் சாடல்
July 31, 2025, 4:22 pm
இடைநிலைப்பள்ளி கல்வியைக் கட்டாயமாக்கிய கல்வியமைச்சருக்கு பாராட்டுகள்: டத்தோ நெல்சன்
July 31, 2025, 2:08 pm
5 வயதிலிருந்து பாலர் பள்ளிக் கல்வியை அரசாங்கம் கட்டாயமாக்கும்: பிரதமர்
July 31, 2025, 2:03 pm
இந்திய சமுதாயத்திற்கான மேம்பாட்டுத் திட்டங்களை மடானி அரசு செயல்படுத்தும்: பிரதமர்
July 31, 2025, 1:35 pm