
செய்திகள் மலேசியா
64,000 குழந்தைகளுக்குப் பாதிப்பு: யார் பொறுப்பேற்பது? நஜிப் கேள்வி
கோலாலம்பூர்:
மே 18ஆம் தேதி வரை மலேசியாவில் 64,000 பள்ளிக் குழந்தைகள் கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக முன்னாள் பிரதமர் நஜிப் துன் ரசாக் தெரிவித்துள்ளார்.
இவர்கள் அனைவரும் 12 வயதுக்கு உட்பட்டவர்கள் என்று குறிப்பிட்டுள்ள அவர், இந்த பாதிப்புக்குப் பொறுப்பேற்றுக் கொள்ளப் போவது யார் எனக் கேள்வி எழுப்பி உள்ளார்.
இதுதொடர்பாக தமது முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ளார் நஜிப்.
"கடந்த ஏப்ரல் மாதம் பெற்றோர் கவலைப்பட வேண்டாம் என்றும் பள்ளிகளில் உள்ள நோய்த் தொற்றுத் திரள்கள் (கிளஸ்டர்) தொடர்பாக அரசாங்கம் உரிய நடவடிக்கை எடுத்து வருவதாகவும் கல்வி அமைச்சர் தெரிவித்திருந்தார். அப்போதே 23,000 குழந்தைகள் பாதிக்கப்பட்டிருந்தனர்.
"பள்ளிகளை முன்கூட்டியே மூடுமாறு நான் முன்பே வலியுறுத்தி இருந்தேன். ஆனால், இன்றுவரை இப் பிரச்சினையை எவ்வாறு எதிர்கொள்ளப் போகிறார்கள் என்பது குறித்து கல்வி அமைச்சர் பதிலளிக்கவில்லை. ஆனால், அப்போது பள்ளிகளைத் திறக்க உத்தரவிடப்பட்டது," என்று நஜிப் தமது பதிவில் தெரிவித்துள்ளார்.
இதற்கிடையே கடந்த 18ஆம் தேதி தொடங்கி நான்கு நாட்களில் மட்டும் 12 வயதுக்குட்பட்ட 64,046 குழந்தைகள் கிருமித் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு குறிப்பிட்டுள்ளதைச் சுட்டிக்காட்டியுள்ள நஜிப், அந்தக் குழந்தைகள் மூலமாக அவர்களது பெற்றோர் மற்றும் வயதில் மூத்தோர் எத்தனை பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது இன்னும் தெரியவில்லை எனக் கூறியுள்ளார்.
தொடர்புடைய செய்திகள்
June 10, 2025, 9:28 pm
நீதிமன்ற வழக்குகள் முடியும் வரை கம்போங் ஜாவா வீடுகளை உடைக்கவோ மக்களை அச்சுறுத்தவோ ...
June 10, 2025, 8:52 pm
இடமாற்றம் செய்யப்பட்ட ஆலயங்கள் அரசாங்க விதிமுறைகளை பின்பற்றி செயல்படுங்கள்: அ. சிவ...
June 10, 2025, 6:07 pm
113ஆவது அனைத்துலக தொழிலாளர்கள் மாநாட்டில் மலேசியாவின் தொழிலாளர்கள் சட்டம், உருமாற்...
June 10, 2025, 5:55 pm
அரசாங்கத்தில் சீர்த்திருத்தங்களை மேற்கொள்ள கால அவகாசம் தேவை: பிரதமர் அன்வார்
June 10, 2025, 5:54 pm
பிகேஆர் மகளிர் பிரிவின் புதிய தலைமைத்துவப் பட்டியல் அறிவிக்கப்பட்டது
June 10, 2025, 4:48 pm
எரிபொருள் குழாயில் கோளாறு: 87,000 க்கும் மேற்பட்ட வாகனங்களை ஹோண்டா நிறுவனம் திரும்...
June 10, 2025, 3:54 pm
கிழக்கு-மேற்கு நெடுஞ்சாலை பாதுகாப்பு விவகாரம்: நாளை அமைச்சரவை கூட்டத்தில் விவாதிக்...
June 10, 2025, 3:46 pm
அலாம் ஷா அறிவியல் இடைநிலைப்பள்ளியின் நிர்வாக கட்டிடத்தில் தீ விபத்து: சேதம் குறித்...
June 10, 2025, 3:24 pm
அன்வாருக்கு எதிரான யூசோஃப் ராவுத்தர் வழக்கை தற்காலிகமாக நிறுத்தி வைக்க நீதிமன்றம் ...
June 10, 2025, 3:21 pm