நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

KLIA விமான நிலையத்தில் பாதுகாப்பை வலுப்படுத்த 17 பரிந்துரைகளுக்கு அமைச்சரவை ஒப்புதல்

சிப்பாங்:

கோலாலம்பூர் சர்வதேச விமான நிலையம் (KLIA), நாட்டின் சர்வதேச நுழைவுப் புள்ளிகளில் பாதுகாப்புக் கட்டுப்பாடுகள், சோதனைகளை பலப்படுத்தவும் இடர் மேலாண்மையை வலுப்படுத்துவதற்குமான  17 பரிந்துரைகளுக்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

நேற்றைய அமைச்சரவைக் கூட்டத்தில் சமர்ப்பிக்கப்பட்ட உள்துறை அமைச்சகம் (KDN), போக்குவரத்து அமைச்சகம் (MOT) ஆகியவற்றின் கூட்டுக் குறிப்பாணையில் இந்தப் பரிந்துரைகள் இடம்பெற்றுள்ளன என்று உள்துறை அமைச்சகமும் போக்குவரத்து அமைச்சகமும் தெரிவித்துள்ளன.

ஒரு உடனடித் தீர்வு நடவடிக்கையாக, தற்போதுள்ள பாதுகாப்புக் கட்டுப்பாடுகளை வலுப்படுத்த ஆறு நடவடிக்கைகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். அவை, அபாயத்தில் இருப்பதாகக் கண்டறியப்பட்ட விமானங்கள், பயணிகள், விமானப் பணியாளர்கள், உடமைகள் ஆகியவற்றின் சோதனைகளை அதிகரிப்பதன் மூலம், அபாயத்தின் அடிப்படையில் இலக்கு வைக்கப்பட்ட பரிசோதனைகளை மேற்கொள்வதாகும்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset