நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

புகைமூட்டம்: சரவாக்கில் 591 பள்ளிகள் இன்றும் நாளையும் மூடப்பட்டன

கூச்சிங்:

சரவாக்கில் உள்ள 10 மாவட்டக் கல்வி அலுவலகங்களின் மேற்பார்வையின் கீழ் இயங்கும் மொத்தம் 591 பள்ளிகள், இன்று முதல் நாளை வரை உடனடியாக மூடப்படும்.

சரவா மாநிலக் கல்வித் துறை இன்று வெளியிட்ட ஓர் அறிக்கையில்,

இந்த மூடல்களில் மொத்தம் 107,590 மாணவர்களைக் கொண்ட 509 தொடக்கப் பள்ளிகளும், 89,733 மாணவர்களைக் கொண்ட 82 இடைநிலைப் பள்ளிகளும் அடங்கும் என்று அறிவித்துள்ளது.

இந்தப் பள்ளிகள் கூச்சிங், படவான், பாவ், லுண்டு, சமரஹான், சிமுஞ்சான், செரியான், ஸ்ரீ அமான், லுபோக் அந்து, பெடோங் ஆகிய மாவட்டக் கல்வி அலுவலகங்களின் மேற்பார்வையின் கீழ் உள்ளன.

இதற்கிடையில், சரவா மாநிலப் பேரிடர் மேலாண்மைக் குழு வெளியிட்ட ஓர் தனி அறிக்கையில்,

வானிலை நிலவரங்கள், காற்றின் தரம், தீ அபாயப் பகுதிகள், காடு, சதுப்பு நிலங்களில் ஏற்படும் தீ அபாயங்கள், மாநிலத்தின் நீர் விநியோக ஆதாரங்களின் நிலை ஆகியவை சம்பந்தப்பட்ட முகமைகளுடன் இணைந்து தொடர்ந்து உன்னிப்பாகக் கண்காணிக்கப்பட்டு வருவதாக அறிவித்துள்ளது.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset