நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

தாபோங் ஹாஜி, பெல்டா மீதான அரசு விசாரணை ஆணையம்; அரசியல் பழிவாங்கல் அல்ல: பிரதமர்

கோலாம்பூர்:

தாபோங் ஹாஜி, பெல்டா மீதான அரச விசாரணை ஆணையத்தின் அறிக்கையில் வெளிப்படுத்தப்பட்டதாகக் கூறப்படும் முறைகேடுகள் குறித்த விசாரணையானது, அரசியல் பழிவாங்கும் நோக்கத்தால் தூண்டப்படவில்லை.

பிரதமர் டத்தோஶ்ரீ அன்வார் இப்ராஹிம் இதனை வலியுறுத்தினார்.

விசாரணை அமைப்புகள், சட்டத்துறை தலைவர் அதிகார வரம்பிற்கு உட்பட்டிருப்பதால், விசாரணையிலோ அல்லது வழக்குத் தொடரும் முடிவிலோ அரசாங்கம் தலையிடாது.

ஒரு வழக்கை விசாரிக்க வேண்டுமா என்பதைத் தீர்மானிக்கும் பொறுப்பு போலிஸ், மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்திற்கும் உள்ளது.

வழக்குத் தொடரும் முடிவு சட்டத்துறை தலைவரின் கையில் உள்ளது என்று அவர் கூறினார்.

ஒரு விசாரணையை நடத்த வேண்டுமா என்பதை யார் தீர்மானிக்கிறார்கள்? அது போலிஸ், எம்ஏசிசி ஆகிய விசாரணை அமைப்புகளின் கையில் உள்ளது.

வழக்குத் தொடர்வதா இல்லையா என்பதை யார் தீர்மானிக்கிறார்? அது சட்டத்துறை தலைவரின் முடிவு. தண்டனையை யார் நிர்ணயிக்கிறார்? நீதிபதி. பிரதமரல்ல என்று கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset