நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

சிறப்பு எச்சரிக்கை விளக்குகள் சிவப்பு சமிஞ்சை விளக்குகளைப் புறக்கணிப்பதற்கான முழுமையான உரிமைகள் அல்ல: முஹம்மது ஹஸ்புல்லா

கோலாலம்பூர்:

சிறப்பு எச்சரிக்கை விளக்குகள், சைரன்கள் ஆகியவற்றை பயன்படுத்தும் எந்தவொரு வாகனத்திற்கும் சிவப்பு சமிஞ்சை விளக்குகளை மீறிச் செல்வதிலிருந்தோ, வேக வரம்பை மீறுவதிலிருந்தோ அல்லது மற்ற சாலைப் பயனாளிகளுக்கு இடையூறு செய்வதிலிருந்தோ விலக்கு அளிப்பதில்லை.

ஒரு வாகனத்தில் சிறப்பு எச்சரிக்கை விளக்குகளைப் பயன்படுத்துவது, 1959ஆம் ஆண்டு மோட்டார் வாகனங்கள் விதிகளின் ஆறாவது அட்டவணைக்கு (விதி 24பி) உட்பட்டது.

புக்கிட் அமான் போக்குவரத்து விசாரணை,  அமலாக்கத் துறை இயக்குநர், டத்தோஶ்ரீ  முஹம்மது ஹஸ்புல்லா அலி இதனை கூறினார்.

சிறப்பு எச்சரிக்கை விளக்குகள் அல்லது சைரன்களைப் பயன்படுத்தினாலும் கூட, போக்குவரத்து சிக்னலுக்கு வரும் எந்தவொரு வாகனமும் தனது பயணத்தைத் தொடர்வதற்கு முன்பு, சாலை நிலைமைகள் முற்றிலும் பாதுகாப்பானவை என்பதை உறுதி செய்ய வேண்டும்.

உண்மையில், பணியில் இருக்கும் அமலாக்க, அவசரகால வாகனங்கள் கூட, சந்திப்புகள் அல்லது போக்குவரத்து சிக்னல்களைக் கடக்கும்போது உட்பட, தங்கள் பயணத்தைத் தொடர்வதற்கு முன்பு சாலை நிலைமைகள் முற்றிலும் பாதுகாப்பானவை என்பதை உறுதி செய்ய வேண்டும்.

உண்மையில், பணியில் உள்ள அமலாக்க அவசரகால வாகனங்கள் கூட, சந்திப்புகள் அல்லது போக்குவரத்து விளக்குகளைக் கடக்கும்போது உட்பட, தங்கள் பயணத்தைத் தொடர்வதற்கு முன்பு சாலை நிலைமைகள் முற்றிலும் பாதுகாப்பானவை என்பதை உறுதி செய்ய வேண்டும் என்று அவர் இன்று மாலை இங்குள்ள ஜாலான் சுல்தான் இஸ்மாயிலில் நடந்த செய்தியாளர்கள் சந்திப்பில் அவர் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset