செய்திகள் மலேசியா
மலேசிய இந்துக்களுக்கு தைப்பூசம் முக்கிய பண்டிகை: பிரதமர் வாழ்த்து
புத்ராஜெயா:
தைப்பூசத்தையொட்டி, மலேசியாவில் உள்ள இந்துக்களுக்கு பிரதமர் இஸ்மாயில் சப்ரி யாகூப் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
அனைவரும் தங்கள் குடும்பத்தார் மற்றும் சமூகத்துடன் பாதுகாப்பாக இப் பண்டிகையைக் கொண்டாட வேண்டும் என்றும் அவர் அறிவுறுத்தி உள்ளார்.
மலேசியா பல்வேறு இன, மதங்களைக் கொண்ட நாடாக ஆசீர்வதிக்கப்பட்டுள்ளது என்றும், பல்வேறு கலாச்சாரங்கள் மற்றும் பரஸ்பர மரியாதை இந்நாட்டில் நிலவுகிறது என்றும் குறிப்பிட்டுள்ள அவர், இந்த அம்சங்கள்தான் மலேசிய குடும்பத்துக்கு வலு சேர்ப்பதாக தெரிவித்துள்ளார்.
மலேசியாவில் உள்ள இந்து பெருமக்களுக்கு தைப்பூசம் மிக முக்கியமான பண்டிகை என்றும், தை மாதத்தில் இந்தப் பண்டிகை கொண்டாடப்படுகிறது என்றும் தெரிவித்துள்ள பிரதமர், தமிழ் நாள்காட்டியில் தை, பத்தாவது மாதமாக வருகிறது எனக் கூறியுள்ளார்.
இந்த ஆண்டு தைப்பூசத்துக்கு என SOPக்கள் வகுக்கப்பட்டுள்ளன. புதிய கட்டுப்பாடுகளுடன் பக்தர்கள் தைப்பூசத்தைக் கொண்டாடி வருகின்றனர்.
தொடர்புடைய செய்திகள்
March 29, 2024, 1:08 pm
பந்திங்கில் இறுதிசடங்கின் ஊர்வலத்தில் பட்டாசுகளை வெடிக்க செய்த ஆடவர் போலீசாரால் கைது
March 29, 2024, 12:34 pm
நாட்டில் 16 மாவட்டங்களில் 15 நாட்களுக்கு மேலாக மழை பெய்யவில்லை: நிக் நஸ்மி
March 29, 2024, 12:31 pm
உட்லண்டஸ், துவாஸ் சோதனைச் சாவடிகளில் கடும் போக்குவரத்து நெரிசல்
March 29, 2024, 10:42 am
4 அரிய வகை வெள்ளை கிளிகள் பறிமுதல்: சென்னை விமான நிலையத்தில் பரபரப்பு
March 29, 2024, 10:30 am
விரைவு பேருந்து தடம் புரண்டது: காராக் நெடுஞ்சாலையில் மோசமான நெரிசல்
March 29, 2024, 10:28 am
அதிகார துஷ்பிரயோக குற்றச்சாட்டுகளின் விடுவிப்பை மீட்டெடுக்க மொஹைதின் முயற்சி
March 29, 2024, 10:26 am