நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

குடிநுழைவுத் துறை லோரி விபத்து: விசாரணை அறிக்கை நாளை சட்டத்துறை தலைவர் அலுவலகத்திற்கு அனுப்பப்படும்

கோலாலம்பூர்:

ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பேர் உயிரிழந்த, குடிநுழைவுத் துறை லோரி சம்பந்தப்பட்ட விபத்து குறித்த விசாரணை ஆவணங்கள், குற்றச்சாட்டுகளைப் பதிவு செய்யும் நோக்கத்திற்காக சட்டத்துறை தலைவர் அலுவலகத்திற்கு அனுப்பப்படும்.

வழக்கின் விசாரணை ஆவணங்களை அரசுத் தரப்பு ஆய்வு செய்த பின்னரே இந்த முடிவு எடுக்கப்பட்டதாக கோலாலம்பூர் போக்குவரத்து புலனாய்வு, அமலாக்கத் துறையின் தலைவர் சம்சுரி ஈசா தெரிவித்தார்.

விசாரணை ஆவணங்களை ஆய்வு செய்த பின்னர், கோலாலம்பூர் மாநில வழக்கறிஞர் இயக்குநர், அந்த விசாரணை ஆவணங்களைப் புத்ராஜயாவில் உள்ள அரசுத் தலைமை வழக்கறிஞர் பிரிவின் பொதுக் குற்றம், பொது ஒழுங்குப் பிரிவின் தலைவருக்கு அனுப்பி வைக்குமாறு பரிந்துரைத்தார்.

எந்தவொரு குற்றச்சாட்டுகளையும் பரிசீலிக்கும் பொருட்டு, விசாரணை ஆவணங்கள் நாளை(ஆகஸ்ட் 20 அன்று அரசுத் தரப்பு இயக்குநரால், விசாரணை அதிகாரியுடன் நேரில் கொண்டுவரப்படும் என்று அவர் ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset