செய்திகள் மலேசியா
இரும்பு கம்பியால் அண்டை வீட்டுக்காரரைத் தாக்கிய நபர்: 7 நாட்கள் தடுப்பு காவலில் வைப்பு
ஜார்ஜ்டவுன்:
அண்டை வீட்டுக்காரர் முதியவரை இரும்பு கம்பியால் தாக்கி படுகாயமடைய செய்த 62 வயது ஆடவரை விசாரணைக்காக 7 நாட்கள் தடுப்பு காவலில் வைக்கப்பட்டுள்ளார்.
குற்றவியல் சட்டத்தின் செக்ஷன் 326இன் கீழ் இந்த சம்பவம் விசாரணை செய்யப்படுகிறது. இன்று தொடங்கி எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை வரை சந்தேக நபர் தடுப்புக் காவலில் இருப்பார்.
மாஜிஸ்டிரெட் நூர்ஹானிசா சாகுல் ஹமித் இந்த தடுப்புக் காவலுக்கு அனுமதி அளித்தார்.
இந்தத் தாக்குதலில் பாதிக்கப்பட்ட முதியவரின் கை மற்றும் கால் பகுதிகளில் பலத்த காயங்கள் ஏற்பட்டுள்ளதாகவும், அவர் பினாங்கு மருத்துவமனையில் தொடர் சிகிச்சை பெற்று வருவதாகவும் வடகிழக்கு மாவட்ட போலிஸ் தலைவர் அப்துல் ரொசாக் முஹம்மத் கூறினார்.
முன்னதாக மோட்டார் சைக்கிளில் வந்த சந்தேக நபர் முதியவரை தாக்கியதாக வீடியோ பதிவு ஒன்று சமூக ஊடகங்களில் வைரலானது. இரும்பு கம்பியால் தாக்கப்பட்ட பதிவுகளும் வைரலானது.
-மவித்திரன்
தொடர்புடைய செய்திகள்
August 24, 2026, 12:55 pm
சுபாங் ஜெயா கேளிக்கை பூங்காவில் ரோலர் கோஸ்டர் விபத்து: 10 பேர் காயம்
August 24, 2026, 11:26 am
ஜொகூர் லிங்கெடுவா நெடுஞ்சாலையில் சட்டவிரோத மோட்டார் பந்தய விவகாரம்: 8 பேர் கைது
August 24, 2026, 10:55 am
செந்தூல் கம்போங் காசிப்பிள்ளையில் அதிகாலையில் தீ விபத்து: ஓர் ஆடவர் பாதிக்கப்பட்டார்
August 24, 2026, 10:27 am
நாட்டிலுள்ள நான்கு மாநிலங்களில் காற்றின் தர குறியீடு ஆரோக்கியமற்ற நிலையில் பதிவு
August 23, 2026, 9:23 pm
புகைமூட்டத்தால் ஆஸ்துமா, சுவாசக்குழாய் தொற்று பாதிப்புகள் கடுமையாக அதிகரித்துள்ளன
August 23, 2026, 9:22 pm
