நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

தமிழ்ப்பள்ளி ஆசிரியை சுதாவின் மரணம் குறித்த விசாரணை இன்னும் நடைபெற்று வருகிறது: போலிஸ்

கோலாலம்பூர்:

கடந்த மாதம் இறுதியில் உலு சிலாங்கூரில் உள்ள ஒரு பள்ளியில் சடலமாகக் கண்டெடுக்கப்பட்ட ஆசிரியரை சுதாவின் மரணம் குறித்து போலிஸ் இன்னும் விசாரித்து வருகிறது.

திடீர் மரணம் என வகைப்படுத்தப்பட்டுள்ள இந்த வழக்கில், மன அழுத்தம் உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறித்து விசாரணை நடைபெற்று வருவதாக சிலாங்கூர் போலிஸ் தலைவர் டத்தோ ஷாசாலி கஹார் தெரிவித்தார்.

நாங்கள் குடும்ப உறுப்பினர்கள், மருத்துவ அதிகாரிகள், தொடர்புடைய நண்பர்களிடமிருந்து வாக்குமூலங்களைப் பெற்றுள்ளோம்.

ஆனால் விசாரணை இன்னும் முடிவுக்கு வரவில்லை.

தனிநபர் பதில் விசாரணை  இன்னும் செயல்பாட்டில் உள்ளது.

எனவே நாங்கள் அதை முடித்து, துணை அரசு வழக்கறிஞர் அலுவலகத்திற்கு அனுப்பும் வரை என்னால் கருத்து தெரிவிக்க முடியாது.

இன்று இங்குள்ள சிலாங்கூர் போலிஸ் தலைமையகத்தில் நடந்த செய்தியாளர் சந்திப்பில் அவர் இவ்வாறு கூறினார்.

-  பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset