நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

தபோங் ஹாஜி RCI சிறப்பு மக்களவை கூட்டத்தில் பங்கேற்க முடியாதத்தற்கு பிரதமர் அன்வார் இப்ராஹிம் மன்னிப்பு 

கோலாலம்பூர்: 

தபோங் ஹாஜியின் அரச விசாரணை ஆணையத்தின் விசாரணை தொடர்பாக விவாதிக்க சிறப்பு மக்களவை கூட்டம் இன்று நடத்தப்படுகிறது. 

இருப்பினும் இந்த சிறப்பு மக்களவை கூட்டத்தில் பிரதமர் டத்தோஶ்ரீ அன்வார் இப்ராஹிம் பங்கேற்காதது குறித்து பிரதமர் அன்வார் மன்னிப்பு கேட்டுக்கொண்டுள்ளார். 

இந்தச் சிறப்பு நாடாளுமன்ற விவாதம் சிறப்பாகவும் சீராகவும் நடைபெற வேண்டும் என்று அவர் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இந்த தகவலை பிரதமர் டத்தோஶ்ரீ அன்வாரின் மூத்த ஊடக செயலாளர் துங்கு நஷ்ருல் ஓர் அறிக்கையின் வாயிலாக தெரிவித்து கொண்டார். 

இஸ்லாமிய நிறுவனத்தின் பொறுப்புகளும் நம்பிக்கையும் தொடர்ந்து பேணப்படுவதை உறுதிசெய்ய, நாடாளுமன்ற விவாதங்களை அன்வார் உன்னிப்பாகக் கவனிப்பார் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

முன்னதாக, பிரதமர் டத்தோஶ்ரீ அன்வார் இப்ராஹிமிற்கு வயிறு தொடர்பான லேப்ராஸ்கோபி அறுவை சிகிச்சைக்குப் பிறகு அவரது உடல்நிலை சீராக முன்னேறி வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

-மவித்திரன் 

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset