நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

சூப்பர் எல் நினோ அடுத்த மாதம் நிகழும் என எதிர்பார்க்கப்படுகிறது: மெட் மலேசியா

கோலாலம்பூர்:

சமீபத்திய தரவு பகுப்பாய்வின் அடிப்படையில், நாட்டில் 'சூப்பர்' எல் நினோவின் உச்சக்கட்ட அலை அடுத்த மாதம், 2027 ஜனவரியிலும் நிகழும் என மலேசிய வானிலை ஆய்வு மையம் (மெட் மலேஐயா) கணித்துள்ளது.

இந்த ஆண்டின் இறுதி முதல் அடுத்த ஆண்டின் தொடக்கம் வரை பாதிக்கப்படக்கூடிய பகுதிகளான வடக்கு தீபகற்ப மலேசியா, சபாவின் சில பகுதிகளில் சராசரியை விட குறைவான மழைப்பொழிவு இருக்கும் என எதிர்பார்க்கப்படுவதாக மெட் மலேசியாவின் தலைமை இயக்குநர் டாக்டர் முகமது ஹிஷாம் முகமது அனிப் தெரிவித்தார்.

அடுத்த ஆண்டு பிப்ரவரி முதல் மே மாதம் வரை, தீபகற்ப மலேசியாவின் வடக்கு மாநிலங்களிலும், கிளந்தான், பகாங், சரவா, சபாவின் உட்பகுதிகளிலும் வழக்கத்தை விட அதிக வெப்பம் நிலவும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சமீபத்திய தகவல்களைப் பெற, மலேசிய வானிலை ஆய்வு மையம் வெளியிடும் வானிலை முன்னறிவிப்புகளையும் எச்சரிக்கைகளையும் பொதுமக்கள் எப்போதும் பின்பற்றுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள் என்று அவர்  கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset