நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

மலாக்கா மாநிலத் தேர்தல்; கைப்பற்றிய 21 இடங்களைத் தக்கவைக்க தேசிய முன்னணி உறுதி கொண்டுள்ளது: ஜாஹித்

கோலாலம்பூர்:

விரைவில் நடைபெறவிருக்கும் மாநிலத் தேர்தலில், மலாக்காவில் கூட்டணி வசம் உள்ள 21 மாநில சட்டமன்ற இடங்களையும் தக்கவைக்க தேசிய முன்னணி  உறுதி கொண்டுள்ளது.

மலாக்கா முதலமைச்சரும், மாநில தேசிய முன்னணி தலைவருமான டத்தோஶ்ரீ அப்துல் ரவுஃப் யூசோ, கேள்விக்குட்பட்ட அனைத்து இடங்களையும் தக்கவைப்பதில் உறுதியாக இருப்பதாக இந்த விஷயத்தைத் தெரிவித்ததாக  தேசிய முன்னனி தலைவர் டத்தோஶ்ரீ டாக்டர் அஹ்மத் ஜாஹித் ஹமிடி கூறினார்.

இருப்பினும், எந்தவொரு கட்சியுடனும் ஒரு உடன்பாட்டிற்கு வர தேசிய முன்னணி தயாராக உள்ளது.

மலாக்காவில் உள்ள 28 இடங்களில், மலாக்கா தேசிய முன்னணி தலைவர் என்ற முறையில் முதலமைச்சர், வென்ற 21 இடங்களின் நிலையையும் தக்கவைப்பதில் உறுதியாக இருப்பதாக என்னிடம் தெரிவித்தார்.

அனைத்துக் கட்சிகளுக்கும் இடையே நிச்சயமாகக் கலந்தாலோசனைகள் நடைபெறும்.  மலாக்கா முதலமைச்சர் கூறியது போல, அவர் மிகவும் வெளிப்படையானவர்.

மேலும், எட்டப்படும் எந்தவொரு ஒப்பந்தம் அல்லது புரிந்துணர்விலும் தீர்மானிக்கும் காரணமாக  மத்திய அளவில் கலந்தாலோசிக்கப்படும் என்று அவர் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset