செய்திகள் மலேசியா
மலாக்கா மாநிலத் தேர்தல்; கைப்பற்றிய 21 இடங்களைத் தக்கவைக்க தேசிய முன்னணி உறுதி கொண்டுள்ளது: ஜாஹித்
கோலாலம்பூர்:
விரைவில் நடைபெறவிருக்கும் மாநிலத் தேர்தலில், மலாக்காவில் கூட்டணி வசம் உள்ள 21 மாநில சட்டமன்ற இடங்களையும் தக்கவைக்க தேசிய முன்னணி உறுதி கொண்டுள்ளது.
மலாக்கா முதலமைச்சரும், மாநில தேசிய முன்னணி தலைவருமான டத்தோஶ்ரீ அப்துல் ரவுஃப் யூசோ, கேள்விக்குட்பட்ட அனைத்து இடங்களையும் தக்கவைப்பதில் உறுதியாக இருப்பதாக இந்த விஷயத்தைத் தெரிவித்ததாக தேசிய முன்னனி தலைவர் டத்தோஶ்ரீ டாக்டர் அஹ்மத் ஜாஹித் ஹமிடி கூறினார்.
இருப்பினும், எந்தவொரு கட்சியுடனும் ஒரு உடன்பாட்டிற்கு வர தேசிய முன்னணி தயாராக உள்ளது.
மலாக்காவில் உள்ள 28 இடங்களில், மலாக்கா தேசிய முன்னணி தலைவர் என்ற முறையில் முதலமைச்சர், வென்ற 21 இடங்களின் நிலையையும் தக்கவைப்பதில் உறுதியாக இருப்பதாக என்னிடம் தெரிவித்தார்.
அனைத்துக் கட்சிகளுக்கும் இடையே நிச்சயமாகக் கலந்தாலோசனைகள் நடைபெறும். மலாக்கா முதலமைச்சர் கூறியது போல, அவர் மிகவும் வெளிப்படையானவர்.
மேலும், எட்டப்படும் எந்தவொரு ஒப்பந்தம் அல்லது புரிந்துணர்விலும் தீர்மானிக்கும் காரணமாக மத்திய அளவில் கலந்தாலோசிக்கப்படும் என்று அவர் கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
August 24, 2026, 12:55 pm
சுபாங் ஜெயா கேளிக்கை பூங்காவில் ரோலர் கோஸ்டர் விபத்து: 10 பேர் காயம்
August 24, 2026, 11:45 am
இரும்பு கம்பியால் அண்டை வீட்டுக்காரரைத் தாக்கிய நபர்: 7 நாட்கள் தடுப்பு காவலில் வைப்பு
August 24, 2026, 11:26 am
ஜொகூர் லிங்கெடுவா நெடுஞ்சாலையில் சட்டவிரோத மோட்டார் பந்தய விவகாரம்: 8 பேர் கைது
August 24, 2026, 10:55 am
செந்தூல் கம்போங் காசிப்பிள்ளையில் அதிகாலையில் தீ விபத்து: ஓர் ஆடவர் பாதிக்கப்பட்டார்
August 24, 2026, 10:27 am
நாட்டிலுள்ள நான்கு மாநிலங்களில் காற்றின் தர குறியீடு ஆரோக்கியமற்ற நிலையில் பதிவு
August 23, 2026, 9:23 pm
புகைமூட்டத்தால் ஆஸ்துமா, சுவாசக்குழாய் தொற்று பாதிப்புகள் கடுமையாக அதிகரித்துள்ளன
August 23, 2026, 9:22 pm
