செய்திகள் உலகம்
சிங்கப்பூரில் 100,000க்கும் அதிகமான பிள்ளைகளுக்கு கோவிட் 19 முதல் தடுப்பூசி போடப்பட்டுள்ளது: கல்வியமைச்சு
சிங்கப்பூர்:
சிங்கப்பூரில் 100,000க்கும் அதிகமான பிள்ளைகளுக்கு COVID-19 தடுப்பூசி போடப்பட்டுள்ளதாகக் கல்வியமைச்சு தெரிவித்துள்ளது.
5இலிருந்து 11 வயது வரையுள்ள பிள்ளைகளுக்கு முதல் தடுப்பூசி போட்டு முடிக்கப்பட்டுள்ளது.
தொடக்கநிலை 1 முதல் 6 வரை படிக்கும் மாணவர்களில் கிட்டத்தட்ட ஐந்தில் இருவர் முதல் தடுப்பூசி போட்டுக்கொண்டதாக சிங்கப்பூர் கல்வி அமைச்சு கூறியுள்ளது.
முன்பதிவின்றி தடுப்பூசி போட்டுக்கொள்ளும் ஏற்பாட்டின்கீழ், கடந்த திங்கட்கிழமையிலிருந்து வியாழன்வரை 2,800க்கும் மேற்பட்ட பிள்ளைகள் பயனடைந்துள்ளனர்.
அதாவது, சராசரியாகத் தடுப்பூசி போட்டுக்கொள்ள பதிவு செய்த பிள்ளைகளில் 20 விழுக்காட்டினர் தங்கள் உடன்பிறந்தோரையும் அழைத்துச் சென்று தடுப்பூசி போட்டுள்ளதாக அமைச்சு குறிப்பிட்டது.

SPED எனும் சிறப்புத் தேவையுடைய மாணவர்களுக்கான 12 பள்ளிகளில், தடுப்பூசி போடும் பணி தொடங்கப்பட்டுள்ளது.
சுகாதார மேம்பாட்டு வாரியத்தின் நடமாடும் தடுப்பூசிக் குழுக்கள் பள்ளிகளில் பணியமர்த்தப்பட்டுள்ளன.
சிறப்புத் தேவையுள்ள மாணவர்கள் மூவரில் இருவர் அங்கு தடுப்பூசி போட்டுக்கொள்ளப் பதிவுசெய்துள்ளனர்.
தகுதிபெற்ற பிள்ளைகளுக்கு இரண்டாவது தவணை தடுப்பூசி போடும் பணி நாளை மறுநாளிலிருந்து அதாவது 17 ஜனவரி ஆம் தேதியிலிருந்து தொடங்கும் என்று கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
தொடர்புடைய செய்திகள்
March 27, 2026, 5:34 pm
எல்லைகளைக் கடந்த மனிதாபிமானம்: ஓமன் வெள்ளத்தில் இந்தியர்களைக் காப்பாற்றிய பாகிஸ்தான் வீரர்
March 27, 2026, 3:18 pm
ஈரானின் கெஷ்ம் தீவுக்கு அருகே தாய்லாந்து சரக்குக் கப்பலான மயூரி நாரி தாக்கப்பட்டது
March 27, 2026, 11:07 am
சுங்கச்சாவடி அமைப்பு மூலம் ஹோர்முஸ் நீரிணையை கட்டுப்படுத்துகிறது ஈரான்
March 27, 2026, 10:38 am
“கழிப்பறை காகிதப் பற்றாக்குறையால் பதற்றம் தேவையில்லை”: மக்களிடம் ஜப்பான் அரசின் வேண்டுகோள்
March 27, 2026, 10:32 am
மேற்காசிய மோதல்: ஈரான் எரிசக்தி வசதிகள் மீதான தாக்குதலை மேலும் 10 நாட்கள் ஒத்திவைக்கிறார் டிரம்ப்
March 26, 2026, 5:33 pm
ஹார்முஸ் ஜலசந்தி வழியாகச் செல்ல 5 நாடுகளுக்கு ஈரான் அனுமதி
March 26, 2026, 4:30 pm
சிங்கப்பூர் சோதனைச் சாவடியில் மோட்டார் சைக்கிளோட்டிகளுக்கு முக அடையாள முறை அறிமுகம்
March 26, 2026, 4:27 pm
ஜப்பான் பள்ளியில் அதிர்ச்சி சம்பவம்: மதிய உணவால் 600க்கும் மேற்பட்ட மாணவர்கள் பாதிப்பு
March 26, 2026, 4:22 pm
