
செய்திகள் உலகம்
சிங்கப்பூரில் 100,000க்கும் அதிகமான பிள்ளைகளுக்கு கோவிட் 19 முதல் தடுப்பூசி போடப்பட்டுள்ளது: கல்வியமைச்சு
சிங்கப்பூர்:
சிங்கப்பூரில் 100,000க்கும் அதிகமான பிள்ளைகளுக்கு COVID-19 தடுப்பூசி போடப்பட்டுள்ளதாகக் கல்வியமைச்சு தெரிவித்துள்ளது.
5இலிருந்து 11 வயது வரையுள்ள பிள்ளைகளுக்கு முதல் தடுப்பூசி போட்டு முடிக்கப்பட்டுள்ளது.
தொடக்கநிலை 1 முதல் 6 வரை படிக்கும் மாணவர்களில் கிட்டத்தட்ட ஐந்தில் இருவர் முதல் தடுப்பூசி போட்டுக்கொண்டதாக சிங்கப்பூர் கல்வி அமைச்சு கூறியுள்ளது.
முன்பதிவின்றி தடுப்பூசி போட்டுக்கொள்ளும் ஏற்பாட்டின்கீழ், கடந்த திங்கட்கிழமையிலிருந்து வியாழன்வரை 2,800க்கும் மேற்பட்ட பிள்ளைகள் பயனடைந்துள்ளனர்.
அதாவது, சராசரியாகத் தடுப்பூசி போட்டுக்கொள்ள பதிவு செய்த பிள்ளைகளில் 20 விழுக்காட்டினர் தங்கள் உடன்பிறந்தோரையும் அழைத்துச் சென்று தடுப்பூசி போட்டுள்ளதாக அமைச்சு குறிப்பிட்டது.
SPED எனும் சிறப்புத் தேவையுடைய மாணவர்களுக்கான 12 பள்ளிகளில், தடுப்பூசி போடும் பணி தொடங்கப்பட்டுள்ளது.
சுகாதார மேம்பாட்டு வாரியத்தின் நடமாடும் தடுப்பூசிக் குழுக்கள் பள்ளிகளில் பணியமர்த்தப்பட்டுள்ளன.
சிறப்புத் தேவையுள்ள மாணவர்கள் மூவரில் இருவர் அங்கு தடுப்பூசி போட்டுக்கொள்ளப் பதிவுசெய்துள்ளனர்.
தகுதிபெற்ற பிள்ளைகளுக்கு இரண்டாவது தவணை தடுப்பூசி போடும் பணி நாளை மறுநாளிலிருந்து அதாவது 17 ஜனவரி ஆம் தேதியிலிருந்து தொடங்கும் என்று கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
தொடர்புடைய செய்திகள்
July 3, 2025, 11:54 am
தாய்லாந்து அரசியல் நெருக்கடி: பும்தாம் வெச்சாயாச்சாய் இடைக்காலப் பிரதமராக நியமனம்
July 2, 2025, 11:21 pm
பாகிஸ்தானில் கடுமையான வெள்ளம்: 64 பேர் பலி, 117 பேர் காயம்
July 2, 2025, 11:14 pm
நீதிமன்ற அவமதிப்பு வழக்கு: முன்னாள் வங்காளதேச பிரதமருக்குச் சிறை தண்டனை விதிப்பு
July 2, 2025, 12:13 pm
இந்தியாவுக்கு 500% வரி விதிக்கிறது அமெரிக்கா
July 2, 2025, 10:50 am
சீனாவின் ஹெனான் பிராந்தியத்தில் கனமழை: இருவர் பலி, அறுவர் மாயம்
July 2, 2025, 10:19 am
மினி லாரி சாலையில் தலைகீழாக கவிழ்ந்தது: சாலையில் சிதறிய மீன்கள்
July 1, 2025, 9:54 pm
சிந்து நதி நீரைப் பெற சர்வதேச அமைப்புகளிடம் முறையீடு: பாகிஸ்தான்
July 1, 2025, 3:55 pm
வெளிநாடுகளுக்கான நிதி உதவிகள் நிறுத்தம்: 14 மில்லியன் பேர் மரணிக்க கூடும்
July 1, 2025, 3:40 pm