
செய்திகள் இந்தியா
முடிவு எடுக்கப்படாமல் இந்தியா -சீனா பேச்சுவார்த்தை ஒத்திவைப்பு
புது டெல்லி :
கிழக்கு லடாக் எல்லை பிரச்சனை தொடர்பாக இந்தியா, சீனா இடையே புதன்கிழமை நடைபெற்ற 14ஆவது கட்ட பேச்சுவார்த்தை முக்கிய முடிவுகள் எதுவும் எடுக்கப்படாமல் முடிந்தது.
இதுகுறித்து வெளியிடப்பட்ட கூட்டறிக்கையில்,
இந்திய, சீன எல்லையில் அமைதியை ஏற்படுத்துவது குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது. அதில், எல்லையில் அமைதி நிலவுவதற்கு ஏற்கெனவே வகுக்கப்பட்ட கொள்கைகளை இரு நாடுகளும் பின்பற்ற வேண்டும் என்று முடிவு செய்யப்பட்டது.
எஞ்சியுள்ள பிரச்னைகளுக்கு இரு தரப்பும் ஏற்றுக்கொள்ளக் கூடிய தீர்வைக் கண்டறிவதற்காக, தொடர்ந்து ராணுவ ரீதியாகவும் தூதரக ரீதியாகவும் பேச்சுவார்த்தை நடத்தவும்,
ராணுவ அதிகாரிகள் நிலையிலான அடுத்தகட்ட பேச்சுவார்த்தையை விரைவில் நடத்தவும் முடிவு செய்யப்பட்டது என்று அந்த கூட்டறிக்கையில் தெரிவிக்கப்பட்டது.
தொடர்புடைய செய்திகள்
June 30, 2025, 7:17 pm
தெலங்கானாவில் ரசாயன தொழிற்சாலையில் விபத்து: 8 பேர் பலி; 10-க்கும் மேற்பட்டோர் காயம்
June 29, 2025, 6:15 pm
பூரி ஜெகந்நாதர் திருவிழாவில் அசம்பாவிதம்: ரத யாத்திரை கூட்ட நெரிசலில் 3 பேர் உயிரிழந்தனர்
June 29, 2025, 6:07 pm
பிகாரில் இந்தியர்கள் என நிரூபிக்க கூடுதல் ஆவணம் கேட்கும் தேர்தல் ஆணையம்
June 29, 2025, 6:04 pm
சிந்து நதி நீர் பிரச்சனை: நடுவர் நீதிமன்ற தீர்ப்பை நிராகரித்தது இந்தியா
June 28, 2025, 6:28 pm
பாகிஸ்தானுக்கு உளவு: இந்திய கடற்படை ஊழியருக்கு தகவலுக்கு ரூ.50 ஆயிரம்
June 28, 2025, 2:27 pm
கலப்பட பெட்ரோல்: முதல்வரின் 10 வாகனங்களும் அடுத்தடுத்து நின்றன
June 28, 2025, 1:41 pm
ஹிந்தி திணிப்பு போராட்டம்: 20 ஆண்டுகளுக்கு பிறகு ஒன்றுகூடும் தாக்கரே சகோதரர்கள்
June 27, 2025, 8:06 pm