செய்திகள் இந்தியா
முஸ்லிம்களுக்கு எதிராக வெறுப்புணர்வு பேச்சு: உத்தரகண்ட் போலீஸாரின் முதல் கைது
புது டெல்லி:
ஹிந்து மத நிகழ்ச்சியில் முஸ்லிம்களுக்கு எதிராக வெறுப்புணர்வைத் தூண்டும் வகையில் வன்மமாக பேசியதாக ஜிதேந்தர் தியாகியை உத்தரகண்ட் போலீஸார் கைது செய்தனர். இந்த விவகாரத்தில் போலீஸார் மேற்கொள்ளும் முதல் கைது இதுவாகும்.
முஸ்லிம்களுக்கு எதிராக கடுமையான தாக்குதல்களை தொடுக்க பேசியவர்கள் மீது போலீஸார் நடவடிக்கை எடுக்கவில்லை என்ற வழக்கு உச்சநீதிமன்றத்தில் தொடுக்கப்பட்டு மத்திய, மாநில அரசுகளுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்ட பிறகு போலீஸார் இந்த கைது நடவடிக்கையை மேற்கொண்டனர்.
உத்தரகண்ட், ஹரித்வாரில் ஜூனா அகாரா ஆசிரமத் தலைவர் யதி நரசிம்மானந்த் கிரி சார்பில் கடந்த டிசம்பர் மாதம் 17ஆம் தேதி மத நிகழ்ச்சி நடத்தப்பட்டது. அந்த நிகழ்ச்சியில் பங்கேற்று பேசிய பலர் சாமியார்கள் இந்தியாவை ஹிந்து தேசமாக்க வேண்டும் என்று கூறியதோடு, முஸ்லிம்கள் மீது தாக்குதல்கள் நடத்த வேண்டும் என்று மிகவும் வன்மத்துடன் பேசினர்.
இதுதொடர்பான புகாரின் பேரில் உத்தரகண்ட் போலீஸார் யதி நரசிம்மானந்த் கிரி, தர்மதாஸ் மகராஜ், அன்னப்பூர்ணா உள்ளிட்டோர் மீது கடந்த டிசம்பர் 23ஆம் தேதி வழக்குப் பதிவு செய்தனர்.
இதில், வசீம் ரிஸ்வி என்ற மகேந்திர கிரியும் உள்ளார். அவர் உத்தர பிரதேச வக்ப் போ்ர்ட் தலைவராக பதவியும் வகித்துள்ளார். மகேந்திர கிரியை போலீஸார் கைது செய்து, யதி நரசிம்மானந்த் கிரி, தர்மதாஸ் மகராஜ் ஆகியோர் விசாரணைக்கு ஆஜராக உத்தரவிட்டுள்ளனர்.
டெல்லியில் டிசம்பர் 19ஆம் தேதி நடைபெற்ற மத நிகழ்விலும், முஸ்லிம்களுக்கு எதிராக வெறுப்புணர்வைத் தூண்டும் வகையில் விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டன.
தொடர்புடைய செய்திகள்
April 26, 2024, 7:34 pm
மணிப்பூர் வன்முறை, பிபிசி அலுவலக சோதனைக்கு அமெரிக்கா விமர்சனம்: இந்தியா எதிர்ப்பு
April 26, 2024, 7:24 pm
சொத்து வாரிசுரிமை வரியை ராஜீவ் காந்தி ஒழித்தது ஏன்?: மோடி அவதூறு கருத்து
April 25, 2024, 6:40 pm
காங்கிரஸ் தேர்தல் அறிக்கையை கண்டு பிரதமர் மோடி அஞ்சிவிட்டார்: ராகுல்
April 25, 2024, 6:15 pm
முஸ்லிம்களுக்கு எதிரான இனத்துவேஷ கருத்து: மோடியை விமர்சித்த பாஜக நிர்வாகி நீக்கம்
April 25, 2024, 6:09 pm
மக்களவைத் தேர்தலில் அகிலேஷ் திடீர் போட்டி
April 25, 2024, 5:44 pm
காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் வாரிசு வரியை அமல்படுத்தும்: மோடி மீண்டும் அவதூறு பேச்சு
April 23, 2024, 4:43 pm
பெரும் போராட்டத்திற்கு பிறகு இறுதியில் கேஜரிவாலுக்கு இன்சுலின் செலுத்தப்பட்டது: ஆம் ஆத்மி
April 23, 2024, 4:38 pm
மேற்கு வங்கத்தில் 25,753 அரசு பள்ளி ஆசிரியர்கள் பணி நியமனம் ரத்து
April 23, 2024, 8:35 am
முஸ்லிம்கள் குறித்து மோடியின் இனத்துவேஷ பேச்சு: காங்கிரஸ் கட்சி தோ்தல் ஆணையத்தில் புகாா்
April 22, 2024, 9:23 am