செய்திகள் உலகம்
காலாவதியான கோவிட் 19 தடுப்பு மருந்து செலுத்தப்பட்ட இருவர் மருத்துவமனையில் அனுமதி
ஹாங்காங்:
ஹாங்காங்கில், காலாவதியான கோவிட் -19 தடுப்பு மருந்து செலுத்தப்பட்ட இருவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
தனியார் மருந்தகத்தில் தடுப்பு மருந்துகளைச் செலுத்திக் கொண்ட அந்த இருவரின் உடல்நிலை சீராய் இருப்பதாக அதிகாரிகள் கூறினர்.
குறிப்பிடப்பட்ட காலாவதித் தேதிக்குச் சில நாளுக்குப் பிறகு, 36 பேருக்கு BioNTech தடுப்பு மருந்து செலுத்தப்பட்டதாகத் தெரிகிறது.
ஜெர்மனி நாட்டில் தயாரிக்கப்பட்ட அந்தத் தடுப்பு மருந்தைப் பாதுகாப்பாக வைத்திருக்கச் சிறப்பு ஏற்பாடுகள் தேவை. மருந்தைச் செலுத்துவதற்கு முன் அதைக் கரைசலாக்க வேண்டும்.

காலாவதியான தடுப்பு மருந்து செலுத்தப்பட்டோருக்கு மோசமான பக்க விளைவுகள் ஏற்பட்டதாகத் தகவல் இல்லை.
என்றாலும், அவர்களுக்கு கிருமித்தொற்றுக்கு எதிராக உரிய பாதுகாப்பு கிடைத்திருக்கிறதா என்பதை பரிசோதனை மூலம் உறுதிப்படுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தொடர்புடைய செய்திகள்
April 24, 2026, 5:23 pm
2,700 ஆண்டுகளுக்குப் பிறகு தாய்நாடு திரும்பிய பூர்வகுடிகள்
April 24, 2026, 1:04 pm
தாய்லாந்தின் மெகா திட்டம்: 2 லட்சம் வேலைவாய்ப்புகளுடன் உருவாகிறது புதிய வர்த்தகப் பாதை
April 24, 2026, 12:37 pm
எரிசக்தித் துறையில் புதிய கூட்டணி: இந்தோனேசியாவிற்குச் சலுகை விலையில் எண்ணெய் வழங்க ரஷ்யா சம்மதம்
April 24, 2026, 9:47 am
லெபனானில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 27 பத்திரிகையாளர்கள் கொல்லப்பட்டனர்: சர்வதேச ஊடக சங்கம்
April 23, 2026, 4:24 pm
பிரிட்டனில் சிகரெட்டுக்கு தடை: நாடாளுமன்றத்தில் சட்டம் நிறைவேற்றப்பட்டது
April 23, 2026, 3:00 pm
ஹார்முஸ் நீரிணையைக் கடக்க முயன்ற 3 கப்பல்கள் மீது தாக்குதல் நடத்தியது ஈரான் ராணுவம்
April 23, 2026, 12:58 pm
பாலி விடுதியில் கைவரிசை காட்டிய இந்தியச் சுற்றுலாப் பயணிகள்: சோதனையில் சிக்கிய பொருட்கள்
April 23, 2026, 9:55 am
