செய்திகள் உலகம்
அமெரிக்கா தாக்கினால், அண்டை நாடுகளில் உள்ள அமெரிக்க ராணுவத் தளங்கள் தாக்கப்படும்: ஈரான் எச்சரிக்கை
டெஹ்ரான்:
ஈரான் தற்காலிகமாக மூடிவைத்த ஆகாயவெளியை மீண்டும் திறந்திருக்கிறது.
ஐந்து மணி நேரம் ஆகாயவெளி மூடப்பட்டதால் பல விமானப் பயணங்கள் ரத்து செய்யப்பட்டன அல்லது தாமதம் அடைந்தன.
இன்று காலை 6 மணியளவில் ஈரான் தனது ஆகாயவெளியை மூடியது.
ஈரானுக்குச் செல்லும், அங்கிருந்து புறப்படும் அனைத்துலக விமானங்களுக்கு மட்டுமே பறக்க அனுமதி வழங்கப்பட்டது.
ஈரானில் வரலாறு காணாத அரசாங்க எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெறும் நிலையில் ஆகாயவெளி மூடப்பட்டது.
அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும் இடையே மோதல் ஏற்படக்கூடும் என்ற அச்சம் ஏற்பட்டது.
ஈரான் மீது ராணுவ நடவடிக்கை எடுக்கப்படலாம் என்று அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் (Donald Trump) கூறியிருக்கிறார்.
அமெரிக்கா தாக்கினால், அண்டை நாடுகளில் உள்ள அமெரிக்க ராணுவத் தளங்கள் தாக்கப்படும் என்று ஈரான் எச்சரித்தது.
அதை அடுத்து நேற்று (14 ஜனவரி) மத்திய கிழக்கில் உள்ள அமெரிக்க ராணுவத் தளங்களிலிருந்து அதிகாரிகள் சிலரை அமெரிக்கா அவசரமாக மீட்டுக்கொண்டது.
ஆதாரம்: Reuters
தொடர்புடைய செய்திகள்
January 15, 2026, 9:32 pm
எதிர்த்தரப்புத் தலைவர் பொறுப்பிலிருந்து பிரித்தம் சிங் நீக்கப்படுகிறார்: பிரதமர் வோங்
January 15, 2026, 9:05 pm
150 ஆண்டுக்குப் பிறகு ஸ்பெயினின் மகாராணியாகிறார் லியோனர்
January 14, 2026, 4:58 pm
தாய்லாந்தில் பயணிகள் ரயில் மீது கிரேன் சரிந்து விழுந்த விபத்தில் 22 பேர் பலி
January 13, 2026, 2:54 pm
நானே வெனிசுலாவின் தற்காலிக அதிபர்: ட்ரம்ப் அதிரடி அறிவிப்பு
January 13, 2026, 2:43 pm
சிங்கப்பூரில் தனியாக வாழும் மூத்தோரின் எண்ணிக்கை 10 ஆண்டுகளில் இரட்டிப்பானது
January 12, 2026, 5:19 pm
ஆஸ்திரேலியாவில் அதீத வெப்பத்தால் காட்டுத்தீ பரவல் தொடர்கிறது: பொதுமக்களுக்கு எச்சரிக்கை
January 11, 2026, 8:50 pm
மலேசிய எல்லை அருகே தாய்லாந்தில் 11 பெட்ரோல் நிலையங்களில் தாக்குதல்
January 9, 2026, 6:34 pm
சிங்கப்பூரில் Nestle NAN பால் மாவுக்குத் தடை
January 9, 2026, 6:28 pm
