நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

பவி சூறாவளி குறித்து மலேசிய வானிலை ஆய்வு மையம் தகவல் வெளியீடு 

கோலாலம்பூர்-

சபாவின் சண்டக்கான் நகருக்கு வடகிழக்கே சுமார் 1,896 கிலோமீட்டர் (கிமீ) தொலைவில் கண்டறியப்பட்ட பாவி புயல் குறித்து மலேசிய வானிலை ஆய்வு மையம்  ஓர் எச்சரிக்கையை  வெளியிட்டுள்ளது.

புயல் தற்போது தைவானின் தைபே நகருக்குத் தென்கிழக்கே சுமார் 1,151 கி.மீ. தொலைவில் நிலைகொண்டுள்ளதாக மெட்மலேசியா இன்று ஓர் அறிக்கையில் அறிவித்துள்ளது.

காலை 8 மணி நிலவரப்படி, புயல் மணிக்கு 20 கிலோமீட்டர் வேகத்தில் மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து கொண்டிருந்ததுடன், அதிகபட்சமாக மணிக்கு 185 கிலோமீட்டர் வேகத்தை எட்டும் ஆற்றலையும் கொண்டிருந்தது.

புயலால் மலேசியாவில் குறிப்பிடத்தக்க பாதிப்பு ஏற்படவில்லை என மெட்மலேசியா அறிவித்துள்ளது.

-மவித்திரன் 

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset