செய்திகள் மலேசியா
ஜொகூர் மாநில தேர்தல் பரப்புரை தொடர்பாக 73 போலிஸ் புகார்கள் பெறப்பட்டுள்ளன
ஜொகூர் பாரு-
16ஆவது ஜொகூர் மாநில சட்டமன்ற தேர்தல் பரப்புரைகள் நாளையோடு நிறைவடைகின்றன.
ஜொகூர் மாநில தேர்தல் பரப்புரை காரணமாக கடந்த ஜூன் 27ஆம் தேதி முதல் சுமார் 73 போலிஸ் புகார்கள் பெறப்பட்டதாக ஜொகூர் மாநில போலிஸ் தலைவர் டத்தோ அப்துல் ரஹமான் அர்ஷாட் கூறினார்.
ஒட்டுமொத்த போலிஸ் புகார்களில் 22 விசாரணை அறிக்கைகள் திறக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.
விசாரிக்கப்பட்டு வரும் இந்த வழக்கில், பகைமையைத் தூண்டுதல், அவதூறு, இணைய வசதிகளை முறையற்ற வகையில் பயன்படுத்துதல் மற்றும் துரோகம் ஆகிய குற்றங்கள் அடங்கியுள்ளன என்று அவர் மேலும் கூறினார்.
அரசியல் பேச்சு மற்றும் பிரச்சார அனுமதிகளுக்காக பெறப்பட்ட 4,368 விண்ணப்பங்களில் 4,053 விண்ணப்பங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.
16ஆவது ஜொகூர் மாநில சட்டமன்ற தேர்தல் ஜூலை 11ஆம் தேதி சனிக்கிழமை நடைபெறவுள்ளது. மொத்தம் 56 சட்டமன்ற இடங்களுக்கு தேர்தல் நடத்தப்படுவதாக மலேசியத் தேர்தல் ஆணையம் இதற்கு முன் தெரிவித்திருந்தது.
-மவித்திரன்
தொடர்புடைய செய்திகள்
July 10, 2026, 11:56 am
ஜொகூர் மாநில தேர்தலில் 15 இந்திய வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்
July 10, 2026, 11:05 am
ஜொகூர் மாநில சட்டமன்ற தேர்தல்: அடுத்த மாநில அரசாங்கத்தை அமைக்க போவது யார் ?
July 10, 2026, 11:03 am
மலாக்காவில் படிவம் ஆறு மாணவர் பள்ளியில் மயங்கி விழுந்து உயிரிழப்பு
July 10, 2026, 10:58 am
ஜொகூர் பிரச்சாரத்தில் மசீசவுக்கு எதிராக டத்தோஸ்ரீ அன்வர் கிண்டலான கருத்துக்களைத் தெரிவித்தார்
July 9, 2026, 11:01 pm
