செய்திகள் மலேசியா
மனித ஆற்றலை மையமாகக் கொண்டு செயற்கை நுண்ணறிவு எதிர்காலத்தை உருவாக்க வேண்டும்: டத்தோஶ்ரீ சரவணன்
ஹைதராபாத்:
மனித ஆற்றலை மையமாகக் கொண்டு செயற்கை நுண்ணறிவு எதிர்காலத்தை உருவாக்க வேண்டும்.
தாப்பா நாடாளுமன்ற உறுப்பினரும் மஇகா துணைத் தலைவருமான டத்தோஶ்ரீ எம். சரவணன் இதனை வலியுறுத்தினார்.
பொது, தனியார் கூட்டாண்மைக்கான உலகளாவிய மாநாட்டில் ஒரு பேச்சாளராகப் பங்கேற்றது எனக்குப் பெருமையளிக்கிறது.
அரசாங்கங்களும் தொழில்துறையும் இணைந்து செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்தவும், மனித மூலதனத்தை வலுப்படுத்தவும், உலகளாவிய தெற்குப் பகுதி முழுவதும் நிலையான பொருளாதார வளர்ச்சியை முன்னெடுக்கவும் எவ்வாறு செயல்படலாம் என்பதை நாங்கள் ஆராய்ந்தோம்.
மத்திய அரசின் புதுப்பிக்கத்தக்க எரிசக்தித் துறையின் கூடுதல் தலைமைச் செயலாளரான நெறியாளர் மனு ஸ்ரீவஸ்தவா, தெ மெரிடியன் கலெக்டிவின் நிர்வாக இயக்குநரான இணை நெறியாளர் ரித்விகா பட்டாச்சார்யா ஆகியோர் அர்த்தமுள்ள மற்றும் ஈடுபாடு மிக்க ஒரு கலந்துரையாடலை வழிநடத்தியதற்காக எனது மனமார்ந்த பாராட்டுகள்.
ஓஷன் ஹவுஸின் நிறுவனரும், உலகளாவிய மூலோபாய ஆலோசகரும் நார்வே அரசாங்கத்தின் முன்னாள் மாநிலச் செயலாளருமான திலெக் அய்ஹான், தென் ஆப்பிரிக்காவின் குழுவின் மேற்பார்வை, பொதுப் பங்கேற்புக்கான அவைத் தலைவரான செட்ரிக் டி. ஃப்ரோலிக் ஆகியோருடன் மேடையைப் பகிர்ந்துகொண்டது எனக்கு அதே அளவு பெருமையளிக்கிறது.
நாம் செயற்கை நுண்ணறிவு சகாப்தத்தைத் தழுவும்போது, நமது மிகப்பெரிய முதலீடாக நமது மக்களே இருக்க வேண்டும்.
திவேட் கல்வியை வலுப்படுத்துவதுடன் தொழில்முனைவோருக்கு அதிகாரம் அளிப்பதன் வாயிலாக தாக்கத்தை ஏற்படுத்த வேண்டும்.
இதன் மூலம் பொது, தனியார் கூட்டாண்மைகளை வளர்ப்பதன் மூலமும், உலக நாடுகள் தொழில்நுட்ப மாற்றத்திற்கு வெறுமனே தங்களை மாற்றியமைத்துக் கொள்வதோடு மட்டுமல்லாமல், எதிர்கால சந்ததியினரின் நலனுக்காக அதனை வடிவமைப்பதையும் நாம் உறுதி செய்ய முடியும்.
குறிப்பாக அனைவரும் ஒன்றிணைந்து, அனைவரையும் உள்ளடக்கிய, பொறுப்புமிக்க, மனித ஆற்றலை மையமாகக் கொண்ட ஒரு செயற்கை நுண்ணறிவு எதிர்காலத்தை உருவாக்க வேண்டும் என்று டத்தோஶ்ரீ சரவணன் கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
July 10, 2026, 11:56 am
ஜொகூர் மாநில தேர்தலில் 15 இந்திய வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்
July 10, 2026, 11:05 am
ஜொகூர் மாநில சட்டமன்ற தேர்தல்: அடுத்த மாநில அரசாங்கத்தை அமைக்க போவது யார் ?
July 10, 2026, 11:03 am
மலாக்காவில் படிவம் ஆறு மாணவர் பள்ளியில் மயங்கி விழுந்து உயிரிழப்பு
July 10, 2026, 10:58 am
ஜொகூர் பிரச்சாரத்தில் மசீசவுக்கு எதிராக டத்தோஸ்ரீ அன்வர் கிண்டலான கருத்துக்களைத் தெரிவித்தார்
July 9, 2026, 11:01 pm
