நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

ஹோர்முஸ் நீரிணை எங்கள் மிகப்பெரிய அதிகார ஆயுதம்: ஈரான் மீண்டும் உறுதி

தெஹ்ரான்: 

உலகின் முக்கிய எண்ணெய் போக்குவரத்து வழித்தடமான ஹோர்முஸ் நீரிணை, ஈரானின் "மிகப்பெரிய அதிகாரக் கருவி" என அந்நாட்டின் உச்ச பேச்சுவார்த்தையாளர் முஹம்மத் பாகர் காலிபாஃப் வலியுறுத்தியுள்ளார்.

புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் (MoU) விதிமுறைகள் முழுமையாக நடைமுறைப்படுத்தப்படும்வரை, இறுதி ஒப்பந்தம் தொடர்பான எந்தவொரு பேச்சுவார்த்தையிலும் ஈரான் பங்கேற்காது என்றும் அவர் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

இந்த அறிவிப்பு, சர்வதேச அழுத்தங்களுக்கு மத்தியிலும், தனது மூலோபாய நிலைப்பாட்டில் ஈரான் உறுதியாக இருப்பதை வெளிப்படுத்துகிறது.

இதற்கிடையில், கத்தார் பிரதமரும் வெளியுறவுத்துறை அமைச்சருமான ஷேக் முஹம்மத் பின் அப்துல்ரஹ்மான் பின் ஜாசிம் அல் தானி, அமெரிக்காவின் சிறப்புத் தூதர்களான ஸ்டீவ் விட்காஃப், ஜாரெட் குஷ்னர் ஆகியோரைத் தோஹாவில் சந்தித்து ஆலோசனை நடத்தினார். இந்தச் சந்திப்பு, பிராந்தியத்தில் நிலவும் பதற்றத்தைக் குறைக்கும் இராஜதந்திர முயற்சியின் ஒரு பகுதியாகப் பார்க்கப்படுகிறது.

அதேவேளையில், லெபனானில் போர் நிறுத்தம் அமலுக்கு வருதல், அமெரிக்கா விதித்துள்ள எண்ணெய் தடைகளை நீக்குதல், முடக்கப்பட்டுள்ள ஈரானிய நிதிகளை விடுவித்தல் ஆகிய முக்கிய நிபந்தனைகள் நிறைவேற்றப்படும் வரையில், இறுதி ஒப்பந்தம் குறித்த பேச்சுவார்த்தையில் ஈடுபடப் போவதில்லை என்ற தனது நிலைப்பாட்டை ஈரான் மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளது.

சங்கீர்த்தனா

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset