செய்திகள் உலகம்
தாய்லாந்து சந்தையில் துப்பாக்கிச் சூடு: ஒருவர் பலி, அறுவர் காயம்
பெங்கொக்:
தாய்லாந்தில் உள்ள நகோன் ரட்சசிமா மாகாணத்தில் நடைபெற்ற வர்த்தக நிகழ்வில் துப்பாக்கி சூடு நடத்தப்பட்டது.
இதில் ஒருவர் பலியான வேளையில் அறுவர் காயமடைந்ததாக போலிஸ் அதிகாரிகள் தெரிவித்தனர்.
இச்சம்பவம் புதன்கிழமை இரவு சுமார் 10.30 மணியளவில் நிகழ்ந்ததாக அதிகாரப்பூர்வத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
நிகழ்வு முடிவடையும் தருவாயில் இத்தாக்குதல் இடம்பெற்றுள்ளது.
கைவினைத் துப்பாக்கியைப் பயன்படுத்தி வியாபாரிகளையும் வருகையாளர்களையும் தாக்கியதாக நிகழ்வின் ஏற்பாட்டாளர் பிரகோப் பாடின் தெரிவித்தார்.
சந்தேக நபர் நிகழ்விடத்தில் நிறுத்தப்பட்டிருந்த மோட்டார் சைக்கிள் ஒன்றை திருட முயன்றதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
கைது செய்யப்பட்ட நபர் மீது துப்பாக்கியைப் பயன்படுத்தி கொலை முயற்சி செய்ததாகக் குற்றம் சாட்டப்படவுள்ளது.
அத்துடன் தலைமறைவாக உள்ள மற்ற சந்தேக நபர்களைத் தீவிரமாகத் தேடும் பணியில் காவல் துறையினர் ஈடுபட்டு வருகின்றனர்.
-மவித்திரன்
தொடர்புடைய செய்திகள்
August 13, 2026, 11:11 am
டெக்சாஸில் ஹெலிகாப்டர் விபத்து: இரு அமெரிக்க ராணுவ வீரர்கள் பலி
August 13, 2026, 11:04 am
வெள்ளை மாளிகையின் பத்திரிகை செயலாளர் பதவியிலிருந்து கரோலின் லீவிட் விலகுகிறார்
August 11, 2026, 11:11 am
வெனிசுவேலாவில் நிகழ்ந்த இரட்டை நிலநடுக்கங்கள்: பலி எண்ணிக்கை 6,301ஆக உயர்வு
August 10, 2026, 3:37 pm
பிரம்மாண்டமாக நடந்த சிங்கப்பூரின் 61ஆவது பிறந்தநாள் கொண்டாட்டம்
August 9, 2026, 4:24 pm
சிங்கப்பூர் தேசிய தின விருதுகள் 7,491 பேருக்கு வழங்கப்படுகின்றன
August 9, 2026, 1:21 pm
