நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

இந்தோனேசியாவில் 7.7 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கம்

ஜகார்த்தா: 

இந்தோனேசியாவில் 7.7 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.. 

நிலநடுக்கத்தை அடுத்து அந்நாட்டில் சுனாமி எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது. 

இந்தோனேசியாவின் வடமேற்கே எண்டே பகுதியிலிருந்து 68 கிலோமீட்டர் தொலைவில் உள்ள புளோரெஸ் தீவில் இன்று அதிகாலை 3.28 மணிக்கு நிலநடுக்கம் ஏற்பட்டது. 

அது ரிக்டர் அளவுகோலில் 7.7 ஆக பதிவாகி இருந்தது.

இந்நிலையில், கிழக்கு நுசந்தாரா, தென் சுலவேசி ஆகிய பகுதிகளில் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால் மக்கள் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

-மவித்திரன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset