செய்திகள் உலகம்
வெனிசுவேலாவில் நிகழ்ந்த இரட்டை நிலநடுக்கங்கள்: பலி எண்ணிக்கை 6,301ஆக உயர்வு
கராகஸ்:
கடந்த ஜூன் மாதம் வெனிசுவேலாவைத் தாக்கிய இரட்டை நிலநடுக்கங்களில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 6,301ஆக அதிகரித்துள்ளதாக அந்நாட்டு அரசாங்கம் திங்கள்கிழமை அறிவித்தது.
கட்டிட இடிபாடுகளுக்கு இடையே மீட்புக் குழுவினரும் குடும்பத்தினரும் தொடர்ந்து தேடுதல் பணியில் ஈடுபட்டு வருவதால் பலி எண்ணிக்கை மேலும் உயர்ந்துள்ளது.
சுமார் 190 கட்டிடங்களை தரைமட்டமாக்கிய 7.2 மற்றும் 7.5 ரிக்டர் அளவிலான இந்த நிலநடுக்கங்களில் காணாமல் போனவர்களின் எண்ணிக்கையை மத்திய அரசு இதுவரை அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கவில்லை.
எனினும், மிகக் கடுமையாகப் பாதிக்கப்பட்ட லா குவைரா மாநிலத்தின் ஆளுநர் ஜோஸ் அலெஜான்ட்ரோ தெரன், சுமார் 1,400 பேரைக் காணவில்லை எனக் கடந்த வாரம் கூறியிருந்தார்.
இந்த இயற்கை பேரிடரால் சுமார் 24,000 பேர் வீடுகளை இழந்து வீடற்ற நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.
இடம்பெயர்ந்த இவர்களில் பெருமளவிலான மக்கள் தற்போது தற்காலிக முகாம்களில் தங்கி வருகின்றனர்.
-மவித்திரன்
தொடர்புடைய செய்திகள்
August 10, 2026, 3:37 pm
பிரம்மாண்டமாக நடந்த சிங்கப்பூரின் 61ஆவது பிறந்தநாள் கொண்டாட்டம்
August 9, 2026, 4:24 pm
சிங்கப்பூர் தேசிய தின விருதுகள் 7,491 பேருக்கு வழங்கப்படுகின்றன
August 9, 2026, 1:21 pm
அமெரிக்க செனட் சபையில் மசோதா நிறைவேற்றம்: இந்திய பொருட்களுக்கு 100 சதவீத வரி விதிக்கப்படும்
August 6, 2026, 3:06 pm
இஸ்ரேல் இராணுவத்தால் படுகொலை செய்யப்பட்ட 112 பேரின் உடல்களுக்கு கூட்டு இறுதிச் சடங்கு
August 6, 2026, 10:52 am
வகுப்பறையில் ஆசிரியர் முன் மாணவன் புகைப்பிடித்த சம்பவம்
August 5, 2026, 2:51 pm
