நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

வெள்ளை மாளிகையின் பத்திரிகை செயலாளர் பதவியிலிருந்து  கரோலின் லீவிட் விலகுகிறார்

வாஷிங்டன்: 

வாஷிங்டனில் வெள்ளை மாளிகையின் பத்திரிகைச் செயலாளராகப் பணியாற்றி வரும் கரோலின் லீவிட் இந்த மாத இறுதியில் தனது பதவியிலிருந்து விலகவுள்ளார்.

எனினும், அவர் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் மூத்த ஆலோசகராகத் தொடர்ந்து பணியாற்றுவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

பத்திரிகையாளர் சந்திப்புகளில் தனது காரசாரமான மற்றும் உறுதியான பேச்சுகளுக்காக அவர் பரவலாகக் கவனிக்கப்பட்டார்.

தனது இளம் குழந்தைகள் மற்றும் குடும்பத்தினருடன் அதிக நேரத்தைச் செலவிடுவதற்காக லீவிட் விலகுவதாக டிரம்ப் சமூக வலைதளத்தில் தெரிவித்துள்ளார்.

கடந்த மே மாதம் லீவிட், விவியானா என்ற தனது இரண்டாவது பெண் குழந்தையைப் பெற்றெடுத்தார்.

அப்போது ஏற்பட்ட சில அசம்பாவிதச் சம்பவங்களைத் தொடர்ந்து, தனது மகப்பேறு விடுமுறையைச் சிறிது காலம் தள்ளிவைத்துவிட்டு அவர் உடனடியாகப் பணிக்குத் திரும்பியிருந்தார்.

வரவிருக்கும் நவம்பர் இடைக்காலத் தேர்தலுக்கு முன்னதாக டிரம்பிற்கான மக்கள் ஆதரவு சரிந்து வரும் சூழலில் இந்த விலகல் முடிவு வந்துள்ளது.

-மவித்திரன் 

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset