செய்திகள் உலகம்
வெள்ளை மாளிகையின் பத்திரிகை செயலாளர் பதவியிலிருந்து கரோலின் லீவிட் விலகுகிறார்
வாஷிங்டன்:
வாஷிங்டனில் வெள்ளை மாளிகையின் பத்திரிகைச் செயலாளராகப் பணியாற்றி வரும் கரோலின் லீவிட் இந்த மாத இறுதியில் தனது பதவியிலிருந்து விலகவுள்ளார்.
எனினும், அவர் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் மூத்த ஆலோசகராகத் தொடர்ந்து பணியாற்றுவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
பத்திரிகையாளர் சந்திப்புகளில் தனது காரசாரமான மற்றும் உறுதியான பேச்சுகளுக்காக அவர் பரவலாகக் கவனிக்கப்பட்டார்.
தனது இளம் குழந்தைகள் மற்றும் குடும்பத்தினருடன் அதிக நேரத்தைச் செலவிடுவதற்காக லீவிட் விலகுவதாக டிரம்ப் சமூக வலைதளத்தில் தெரிவித்துள்ளார்.
கடந்த மே மாதம் லீவிட், விவியானா என்ற தனது இரண்டாவது பெண் குழந்தையைப் பெற்றெடுத்தார்.
அப்போது ஏற்பட்ட சில அசம்பாவிதச் சம்பவங்களைத் தொடர்ந்து, தனது மகப்பேறு விடுமுறையைச் சிறிது காலம் தள்ளிவைத்துவிட்டு அவர் உடனடியாகப் பணிக்குத் திரும்பியிருந்தார்.
வரவிருக்கும் நவம்பர் இடைக்காலத் தேர்தலுக்கு முன்னதாக டிரம்பிற்கான மக்கள் ஆதரவு சரிந்து வரும் சூழலில் இந்த விலகல் முடிவு வந்துள்ளது.
-மவித்திரன்
தொடர்புடைய செய்திகள்
August 13, 2026, 5:25 pm
தாய்லாந்து சந்தையில் துப்பாக்கிச் சூடு: ஒருவர் பலி, அறுவர் காயம்
August 13, 2026, 11:11 am
டெக்சாஸில் ஹெலிகாப்டர் விபத்து: இரு அமெரிக்க ராணுவ வீரர்கள் பலி
August 11, 2026, 11:11 am
வெனிசுவேலாவில் நிகழ்ந்த இரட்டை நிலநடுக்கங்கள்: பலி எண்ணிக்கை 6,301ஆக உயர்வு
August 10, 2026, 3:37 pm
பிரம்மாண்டமாக நடந்த சிங்கப்பூரின் 61ஆவது பிறந்தநாள் கொண்டாட்டம்
August 9, 2026, 4:24 pm
சிங்கப்பூர் தேசிய தின விருதுகள் 7,491 பேருக்கு வழங்கப்படுகின்றன
August 9, 2026, 1:21 pm
