நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

பிரம்மாண்டமாக நடந்த சிங்கப்பூரின் 61ஆவது பிறந்தநாள் கொண்டாட்டம்

சிங்கப்பூர்:

சிங்கப்பூரின் 61ஆவது பிறந்தநாள் கொண்டாட்டம் பிரம்மாண்டமாக நடந்துமுடிந்தது.

தேசிய விளையாட்டரங்கைத் தாண்டி காலாங் வட்டாரத்தைச் சுற்றிலும்பார்வையாளர்களைப் பரவசப்படுத்தின பல நிகழ்ச்சிகள் அரங்கேறின.

இவ்வாண்டின் தேசிய தின அணிவகுப்பு புதிய உச்சத்தைத்
தொட்டுச்சென்றது என்று சொல்லலாம்.

பல புதுமைகள்...வியக்கவைக்கும் ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.

300க்கும் மேற்பட்ட ஆளில்லா வானூர்திகள் வலம் வந்தன.

தேசிய தின வரலாற்றிலேயே மிகப் பெரிய ஒளிக் காட்சியமைப்பு...

இவை அனைத்துக்கும் உயிர் கொடுத்தனர், 2,600க்கும் மேற்பட்ட கலைஞர்கள்.

ஆடல்... பாடல்... வாணவேடிக்கைகள் நிறைந்த கொண்டாட்டமாக அமைந்தது.

சிங்கப்பூரின் வரலாற்றைக்கூறும் அங்கத்தில் அழகு மிதவைகள் பவனி வந்தன.

சுமார் 30 மீட்டர் உயரத்தில் கலைஞர் ஜாஸ்மின் சோக்கோ இரண்டு வான்கலைஞர்களுடன் பாடலைப் படைத்தார்.

அவர்களைச் சுற்றிலும் 300 ஆளில்லா வானூர்திகள்.

அது பிரமாண்டமான காட்சியாக இருந்தது.

- ஆர்யன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset