செய்திகள் உலகம்
ஈரான் நாட்டு அச்சுறுத்தல் காரணமாக துருக்கியிலிருந்து ரகசிய இராணுவ விமானத்தில் பயணம் செய்த டொனால்டு டிரம்ப்
வாஷிங்டன்:
ஈரான் நாட்டு அச்சுறுத்தல் காரணமாக அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் கடந்த மாதம் துருக்கியிலிருந்து ரகசிய ராணுவ விமானம் மூலம் பயணம் மேற்கொண்டதாக அமெரிக்காவைச் சேர்ந்த THE WASHINGTON POST செய்தி வெளியிட்டது
அவர் அதிகாரப்பூர்வ AIR FORCE ONE விமானத்தில் பயணிப்பதாக வெள்ளை மாளிகை அறிவித்திருந்த நிலையிலேயே இந்த ரகசிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
நேட்டோ உச்சிமாநாட்டில் பங்கேற்பதற்காகத் துருக்கியின் அங்காரா நகருக்கு டிரம்ப், கத்தார் அரசாங்கத்தால் நன்கொடையாக வழங்கப்பட்டு புதுப்பிக்கப்பட்ட புதிய ஜெட் விமானத்தைப் பயன்படுத்திச் சென்றிருந்தார்.
எனினும், அந்நாட்டிலிருந்து புறப்படும்போது அவர் எதிர்பாராதவிதமாக பழைய ஏர் போர்ஸ் ஒன் விமானத்தைப் பயன்படுத்தியது, புதிய விமானத்தின் பாதுகாப்பு குறித்து பல கேள்விகளை எழுப்பியுள்ளது.
அமெரிக்காவிற்குப் பல எதிரிகள் இருப்பதாகவும், அவர்கள் அதிபரைக் குறிவைத்துள்ளதாகவும் வெள்ளை மாளிகை வெளியிட்டுள்ள அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
எனவே, இத்தகைய அச்சுறுத்தல்களை முறியடிக்க அமெரிக்க நிர்வாகத்தின் கைவசம் உள்ள அனைத்துப் பாதுகாப்பு வழிமுறைகளும் தொடர்ந்து பயன்படுத்தப்படும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.
-மவித்திரன்
தொடர்புடைய செய்திகள்
August 11, 2026, 11:11 am
வெனிசுவேலாவில் நிகழ்ந்த இரட்டை நிலநடுக்கங்கள்: பலி எண்ணிக்கை 6,301ஆக உயர்வு
August 10, 2026, 3:37 pm
பிரம்மாண்டமாக நடந்த சிங்கப்பூரின் 61ஆவது பிறந்தநாள் கொண்டாட்டம்
August 9, 2026, 4:24 pm
சிங்கப்பூர் தேசிய தின விருதுகள் 7,491 பேருக்கு வழங்கப்படுகின்றன
August 9, 2026, 1:21 pm
அமெரிக்க செனட் சபையில் மசோதா நிறைவேற்றம்: இந்திய பொருட்களுக்கு 100 சதவீத வரி விதிக்கப்படும்
August 6, 2026, 3:06 pm
இஸ்ரேல் இராணுவத்தால் படுகொலை செய்யப்பட்ட 112 பேரின் உடல்களுக்கு கூட்டு இறுதிச் சடங்கு
August 6, 2026, 10:52 am
வகுப்பறையில் ஆசிரியர் முன் மாணவன் புகைப்பிடித்த சம்பவம்
August 5, 2026, 2:51 pm
