செய்திகள் உலகம்
பாலியல் துஷ்பிரயோக வழக்கில் அதிபர் டிரம்பின் மனுவை நிராகரித்தது உச்ச நீதிமன்றம்
வாஷிங்டன்:
எழுத்தாளரை பாலியல் துஷ்பிரயோகம் செய்த வழக்கில் அதிபர் டிரம்ப்பின் மனுவை உச்ச நீதிமன்றம் நிராகரித்தது.
அமெரிக்க அதிபர் டிரம்ப் மீது ஏராளமான பாலியல் குற்றச்சாட்டுகள் உள்ளன. இதே போல் முன்னணி எழுத்தாளர் ஜீன் கரோலை பாலியல் ரீதியாக துஷ்பிரயோகம் செய்ததாக குற்றச்சாட்டு உள்ளது.
1996ஆம் ஆண்டு டிரம்ப் டவருக்கு எதிரே உள்ள குட்மேன் என்ற ஆடம்பர விற்பனையகத்தின் ஆடை மாற்றும் அறையில், டிரம்ப் ஒரு நட்பான சந்திப்பில் பாலியல் துஷ்பிரயோகம் செய்ததாக புகார் எழுந்தது.
கடந்த 2022ல் கரோல் முன்வைத்த குற்றச்சாட்டை டிரம்ப் மறுத்தார். இருப்பினும் 5 மில்லியன் நஷ்டஈடு வழங்க நீதிமன்றம் உத்தரவிட்டது. இதை எதிர்த்து டிரம்ப், உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார். அந்த தீர்ப்பை ரத்து செய்யக் கோரிய அதிபர் டிரம்பின் மனுவை உச்ச நீதிமன்றம் நேற்று நிராகரித்தது.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
June 28, 2026, 7:31 pm
ஜப்பானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: கட்டிடங்கள் குலுங்கின
June 28, 2026, 7:22 pm
ஆஸ்திரேலியாவில் ஆளைக்கொல்லும் சுறாக்களைக் கண்காணிக்க ஆளில்லா வானூர்திகள்
June 27, 2026, 6:47 pm
சிங்கப்பூரில் $5,000 சம்பளத்துக்கு ஆள் தேடும் Tower Transit
June 26, 2026, 12:57 pm
அடையாளம் தெரியாத பொருளால் தாக்கப்பட்ட சரக்குக் கப்பல்: ஹார்முஸ் நீரிணையில் மீண்டும் பதற்றம்
June 25, 2026, 4:24 pm
பாங்காக்கில் கொதிக்கும் வெப்ப அச்சுறுத்தல்
June 25, 2026, 4:09 pm
வெனிசுலாவை உலுக்கிய இரட்டை நிலநடுக்கம்: குறைந்தது 32 பேர் பலி, 700-க்கும் மேற்பட்டோர் காயம்
June 25, 2026, 2:54 pm
கொளுத்தும் வெயில்: பிரான்சில் மக்கள் அவதி
June 25, 2026, 11:41 am
