செய்திகள் உலகம்
ஆஸ்திரேலியாவில் ஆளைக்கொல்லும் சுறாக்களைக் கண்காணிக்க ஆளில்லா வானூர்திகள்
சிட்னி:
ஆஸ்திரேலியாவின் சிட்னி கடற்கரைகளில் வரும் ஜூலை முதல் தேதியிலிருந்து சுறாக்களைக் கண்காணிக்க ஆளில்லா வானூர்திகள் பயன்படுத்தப்படவுள்ளன.
38 கடற்கரைகளில், அதிகாலை முதல் மாலை வரை கண்காணிப்புத் தொடரும்.
சுறாப் பாதுகாப்பு நடவடிக்கைகளுக்காக அடுத்த ஈராண்டில் சுமார் 107 மில்லியன் வெள்ளி செலவிடவிருப்பதாக ஆஸ்திரேலிய அரசாங்கம் அறிவித்தது.
இதில் வானூர்திக் கண்காணிப்பு முயற்சிக்கு ஒதுக்கப்படும் 30 மில்லியன் வெள்ளியும் அடங்கும்.
சுறாக்களைக் கண்டறியும் திறனை மேம்படுத்துவதற்காக, இரண்டு புதிய செயற்கை நுண்ணறிவு அமைப்புகள் சோதிக்கப்படும் என்று அரசாங்கம் தெரிவித்துள்ளது.
மக்கள் கடற்கரைகளில் பயமின்றி நீந்துவதற்கான நம்பிக்கையைக் கொடுக்கும் என்றார் நியூ சவுத் வேல்ஸின் முதல்வர் கிறிஸ் மின்ஸ் (Chris Minns)
இம்மாதம் சிட்னி கடற்கரையில் ஒரு பெண், சுறாவால் தாக்கப்பட்டதைத் தொடர்ந்து சுறா கட்டுப்பாட்டு நடவடிக்கை தீவிரப்படுத்தப்படுகிறது.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
August 15, 2026, 5:28 pm
இந்தோனேசியாவின் ப்ளோரஸ் தீவில் பயங்கர நிலநடுக்கம்: மலேசியர்கள் பாதுகாப்பாக உள்ளனர்
August 15, 2026, 11:11 am
ஹோர்முஸ் நீரினையை விரைவில் அமெரிக்கா பிராந்தியமாக அறிவிப்பேன்: அதிபர் டிரம்ப் அறிவிப்பு
August 15, 2026, 10:49 am
இந்தோனேசியாவில் 7.7 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கம்
August 14, 2026, 5:33 pm
ஆஸ்திரேலியாவில் 3 முறை விமானங்கள் மோதல் சம்பவங்கள்: பிரதமர் ஆன்ட்டனி ஆல்பனீசி விசாரணைக்கு உத்தரவு
August 13, 2026, 5:25 pm
தாய்லாந்து சந்தையில் துப்பாக்கிச் சூடு: ஒருவர் பலி, அறுவர் காயம்
August 13, 2026, 11:11 am
டெக்சாஸில் ஹெலிகாப்டர் விபத்து: இரு அமெரிக்க ராணுவ வீரர்கள் பலி
August 13, 2026, 11:04 am
வெள்ளை மாளிகையின் பத்திரிகை செயலாளர் பதவியிலிருந்து கரோலின் லீவிட் விலகுகிறார்
August 11, 2026, 11:11 am
வெனிசுவேலாவில் நிகழ்ந்த இரட்டை நிலநடுக்கங்கள்: பலி எண்ணிக்கை 6,301ஆக உயர்வு
August 10, 2026, 3:37 pm
