நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

கொளுத்தும் வெயில்: பிரான்சில் மக்கள் அவதி

பாரிஸ்:

பிரான்சில் வெயில் கொளுத்துகிறது. சில பகுதிகளில் மின்சாரம் இல்லை. மக்கள் அவதிப்படுகின்றனர்.

1947ஆம் ஆண்டுக்குப் பிறகு பிரான்சில் வெப்பம் கடுமையாக உயர்ந்திருக்கிறது. நாள்தோறும் சராசரி வெப்பம் 30 டிகிரி செல்சியஸைத் தொட்டுவிட்டது.

நாட்டின் பாதிக்கும் மேற்பட்ட பகுதிகளில் உச்சபட்ச வெப்ப எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பிரான்சின் மேற்குப் பகுதியில் ஆயிரக்கணக்கான வீடுகளில் மின்சாரம் இல்லை.

கடுமையான வெயிலால் பிரான்ஸ், ஸ்பெயின், இத்தாலி ஆகிய நாடுகளில் சிலர் உயிரிழந்தனர்.

மீண்டும் மீண்டும் ஏற்படும் வெப்ப அலைகள் உலக வெப்பநிலை உயர்வதன் அறிகுறி என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.

வெப்ப அலைகள் இன்னும் அடிக்கடி ஏற்படலாம். கடுமையாவதோடு நீண்டநாளுக்கு நீடிக்கலாம் என்று அவர்கள் எச்சரித்தனர்.

- ஆர்யன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset