நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

சன்சூரியா குடியிருப்பில் இந்தோனேசியப் பெண் கொலை: 44 வயது பெண்ணுக்கு நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு

செப்பாங்:

இம்மாத தொடக்கத்தில் பண்டார் சன்சூர்யா அடுக்குமாடி குடியிருப்பில் இந்தோனேசிய பெண் ஒருவரைக் கொலை செய்த குற்றத்திற்காக பெண் ஒருவர் இன்று மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டுள்ளார்.

கடந்த 3 ஆம் தேதி ஜூன் மாதம் மதியம் 2.31 மணியளவில், தி ஒலிவ் (The Olive) குடியிருப்பில் உள்ள ஒரு வீட்டில் புத்திரி எனும் இந்தோனேசிய பெண்ணைக் கொலை செய்த வழக்கில் 44 வயதான  சின் சியாவ் லான் குற்றம் சாட்டப்பட்டுள்ளார்.

குற்றஞ்சாட்டப்பட்டவர், குற்றவியல் சட்டத்தின் 302ஆவது பிரிவின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளார்.  குற்றம் நிரூபிக்கப்பட்டால் சுயதொழில் செய்யும் சியாவ் லானுக்கு மரணதண்டனை அல்லது 30 முதல் 40 ஆண்டுகள் சிறை தண்டனையும் 12 முறை பிரம்படியும் விதிக்கப்படலாம்.

நீதிமன்றத்தில் தன் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகள் வாசிக்கப்பட்டபோது புரிந்து கொண்டதாக ஒப்புக்கொண்ட குற்றவாளி எந்த ஒப்புதல் வாக்குமூலத்தையும் பதிவிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இதற்கிடையில் அரசு தரப்பு வழக்கறிஞரான பி.லுவித்தா, ஆவணங்களைச் சமர்பிக்கும் தேதியை நீதிமன்றத்தில் கோரியுள்ளார்.

நீதிபதி மாஜிஸ்திரேட்  கைராத்துல் அனிமா ஜெலானி ஜூலை 21 தேதியை வழக்கின் அடுத்த விசாரணைக்காக நிர்ணயத்துள்ளார்.

குற்றம் சாட்டப்பட்டவருக்கு வழக்கறிஞர் வி.அய்யாசாமி ஆஜரானார்.

-சங்கீர்த்தனா

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset