நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

பிரதமர் இரண்டு நாள் அதிகாரப்பூர்வ பயணமாக துர்க்மெனிஸ்தான் சென்றடைந்தார்

அஷ்காபாத்:

பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் இரண்டு நாள் அதிகாரப்பூர்வ பயணமாக துர்க்மெனிஸ்தான் சென்றடைந்தார்.

கசான் நகருக்கா அ தனது இரண்டு நாள் பணிப் பயணத்தை நிறைவுசெய்த பிரதமர்,

மத்திய ஆசிய நாடான துர்க்மெனிஸ்தானின் தலைநகரான, இங்கு 'வெள்ளை பளிங்கு நகரம்' என அழைக்கப்படும் இடத்திற்கு இன்று வந்தடைந்தார்.

நிதி அமைச்சராகவும் இருக்கும் டத்தோஸ்ரீ அன்வாருடன், முதலீடு, வர்த்தகம், தொழில்துறை அமைச்சர் டத்தோஸ்ரீ ஜொஹரி அப்துல் கனி, பொருளாதார அமைச்சர் அக்மல் நஸ்ருல்லா முகமது நசீர், அத்துடன் பிரதமர் அலுவலகம், வெளியுறவு அமைச்சின் அதிகாரிகளும் உடன் வந்திருந்தனர்.

பிரதமர் வந்தடைந்ததும், துர்க்மெனிஸ்தானுக்கான மலேசியத் தூதர் முகமது சுஹைமி அஹ்மத் தாஜுதீன், துர்க்மெனிஸ்தானின் எண்ணெய், எரிவாயு அமைச்சரவையின் துணைத் தலைவர் குவாஞ்ச் அகஜனோவ் ஆகியோர் பிரதமரை வரவேற்றனர்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset