செய்திகள் மலேசியா
சுங்கை சிப்புட் கம்போங் பெங்காலி நிலப் பிரச்சினைக்கு தீர்வுக்கான உரிய நடவடிக்கை எடுக்கப்படும்: டத்தோ சிவநேசன்
ஈப்போ:
அரசாங்க நிலத்தில் வசித்து வரும் இந்தியக் குடும்பங்களின் நிலப் பிரச்சனைகளுக்கு பேரா மாநில அரசு தீரவுக் கண்டுள்ளது.
அந்த வகையில் சுமார் நூறாண்டு காலமாக வசித்து வரும் சுங்கை சிப்புட்டில் உள்ள கம்போங் பெங்காலி நில விவகாரங்களுக்கு விரைவில் தீர்வுக்கான உரிய நடவடிக்கை எடுப்படும்
பேரா மாநில ஆட்சிக் குழு உறுப்பினரும் இந்திய விவகாரங்களுக்கான தலைவருமான டத்தோ அ. சிவநேசன் இதனை கூறினார்.
இந்த விவகாரம் பல ஆண்டு காலமாக இருந்து வருகிறது
இந்த கிராமத்தில் தற்பொழுது வசித்து வரும் 27 குடும்பங்களின் நிலப் பிரச்சனைகளுக்கு தீர்வுக்கான ஒரு அரசியல் கட்சி பல ஆண்டுகள் நடவடிக்கை எடுத்தும் பயன் கிடைக்கவில்லை.
தற்போது அதனை நேரடியாக தம்மிடைய கவனத்திற்கு கொண்டு வரப்படடுள்ளது.
அந்த குடிப்பாளர்கள் சாரபில் அதன் பிரதிநிதிகள் ஈப்போவில் உள்ள இந்திரா மூலியா அரங்கில் மாநில மந்திரி பெசார் தலைமையில் நடைபெற்ற மக்கள் சந்திப்பு நிகழ்வில் என்னை சந்தித்து பிரச்சனையை முன் வைத்துள்ளனர்.
இதற்கு முன்பு சுங்கை சிப்புட்டில் உள்ள மக்கள் எதிர்நோக்கிய நிலப் பிரச்சனைகளுக்கு தீர்வுக் கானப்பட்டுள்ளதையும் சிவநேசன் நினைவுக் கூர்ந்தார்.
இந்த சந்திப்பில் முன்னாள் ஊராட்சி மன்ற உறுப்பினர் கே. மணிமாறன் கலந்து கொண்டார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
June 19, 2026, 3:25 pm
16ஆவது பொதுத் தேர்தலில் சிலாங்கூரில் போட்டியிட தெங்கு ஸப்ருல் முன்மொழிவு
June 19, 2026, 12:40 pm
கோலாலம்பூரில் 287 சிறுவியாபார மையங்கள் நவீனமயமாக்கப்படுகின்றன
June 19, 2026, 11:18 am
சன்சூரியா குடியிருப்பில் இந்தோனேசியப் பெண் கொலை: 44 வயது பெண்ணுக்கு நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு
June 19, 2026, 10:10 am
பெர்லிஸில் அதிகரிக்கும் ரோஹிங்கியா மக்கள் தொகை உள்ளூர் மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
June 19, 2026, 9:03 am
