செய்திகள் மலேசியா
கெடிலான் உதவித் தலைவர்களாக சைபுடின், ஜலேஹா நியமனம்
கோலாலம்பூர்:
கெடிலான் கட்சியின் உதவித் தலைவர்களாக டத்தோஸ்ரீ சைபுடின் நசுதியோன், டாக்டர் ஜலேஹா முஸ்தபா ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
ஜொகூர், நெகிரி செம்பிலான் மாநிலத் தேர்தல்களுக்குத் தயாராகி வரும் நிலையில் இந்நியமனம் நடந்துள்ளது.
ஜொகூரின் பத்து பகாட் நகரில் இன்று நடைபெற்ற கெஅடிலான் அரசியல் குழு, மத்திய தலைமை மன்றத்தின் மாதாந்திரக் கூட்டத்தில் இந்த நியமனங்கள் செய்யப்பட்டதாக கெஅடிலான் தகவல் பிரிவுத் தலைவர் ஃபஹ்மி ஃபட்ஸில் தெரிவித்தார்.
மத்திய அளவில் கட்சியின் அமைப்பையும் பணிகளையும் மேலும் வலுப்படுத்தவும் ஒருங்கிணைக்கவும் இந்த நியமனங்கள் செய்யப்பட்டுள்ளன.
டத்தோஸ்ரீ சைபுடின் இதற்கு முன்பு கெஅடிலானின் பொதுச் செயலாளராக இருந்தார்.
அதே சமயம் ஜலேஹா தற்போது கெஅடிலான் ஜொகூர் தலைவராக உள்ளார்.
நியமிக்கப்பட்ட மூன்று உதவித் தலைவர்களாக ரோலண்ட் எங்கனுடன் இவர்கள் இணைகின்றனர் என்று ஃபஹ்மி கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
July 27, 2026, 8:14 pm
அரச நிறுவனங்களை மதிப்பதுடன் 3ஆர் பிரச்சினைகளைத் தொடுவதைத் தவிர்க்க வேண்டும்: ஜாஹித்
July 27, 2026, 8:12 pm
முட்டைகள் வாங்கியபோது முகமூடி அணிந்த சந்தேக நபரால் சுடப்பட்டதில் ஆடவர் காயம்
July 27, 2026, 8:10 pm
ஒற்றுமையும் வேல் சக்தியும் இந்திய மாணவர்களின் கல்வி வெற்றிக்கு வழிகாட்டும்: சுரேன் கந்தா
July 27, 2026, 8:08 pm
