செய்திகள் மலேசியா
முட்டைகள் வாங்கியபோது முகமூடி அணிந்த சந்தேக நபரால் சுடப்பட்டதில் ஆடவர் காயம்
சிம்பாங் அம்பாட்:
முட்டைகள் வாங்கியபோது முகமூடி அணிந்த சந்தேக நபரால் சுடப்பட்டதில் ஆடவர் காயமடைந்தார்.
இந்த சம்பவம் இன்று இங்குள்ள ஜாலான் பெர்னியாகான் ஸ்ரீ தம்பூன் சாலையில் நிகழ்ந்தது.
குற்றப் பின்னணி கொண்ட 38 வயதுடைய ஆடவர் ஒருவர் இந்த சம்பவத்தில் காயமடைந்தார்.
பாதிக்கப்பட்டவர் உடற்பயிற்சிக் கூடத்தில் தனது உடற்பயிற்சியை முடித்துவிட்டு, அதே கட்டிடத்தில் உள்ள ஒரு மளிகைக் கடைக்கு முட்டைகள் வாங்கச் சென்றபோது, காலை சுமார் 10 மணியளவில் இந்தச் சம்பவம் நிகழ்ந்ததாகக் கூறப்படுகிறது.
அவர் காரில் ஏறவிருந்தபோது, கருப்பு ஜாக்கெட் அணிந்த முகமூடி நபர் ஒருவர் அவரை அணுகி, அவரை நோக்கி பலமுறை சுட்டதாகக் கூறப்படுகிறது.
அதன்பிறகு, பாதிக்கப்பட்டவர் தன்னைக் காப்பாற்றிக்கொள்ள அருகிலுள்ள ஒரு உணவகத்திற்குத் தப்பி ஓடினார்.
ஆனால் சந்தேக நபர் அவரைத் துரத்திச் சென்று மேலும் பலமுறை சுட்டதாக நம்பப்படுகிறது.
தோட்டாக்களில் ஒன்று பாதிக்கப்பட்டவரின் வலது கையில் பட்டதாக நம்பப்படுகிறது.
சந்தேக நபர் காரில் தப்பிச் செல்வதற்கு முன்பு குறைந்தது ஐந்து முறை சுட்டதாகக் கூறப்படுகிறது.
காயமடைந்தவர் சிகிச்சைக்காக செபராங் ஜெயா மருத்துவமனைக்கு அவசரமாகக் கொண்டு செல்லப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
July 27, 2026, 8:14 pm
அரச நிறுவனங்களை மதிப்பதுடன் 3ஆர் பிரச்சினைகளைத் தொடுவதைத் தவிர்க்க வேண்டும்: ஜாஹித்
July 27, 2026, 8:10 pm
ஒற்றுமையும் வேல் சக்தியும் இந்திய மாணவர்களின் கல்வி வெற்றிக்கு வழிகாட்டும்: சுரேன் கந்தா
July 27, 2026, 8:08 pm
அயோப் கானின் மரபு போலிஸ் அதிகாரிகளுக்கு தொடர்ந்து ஊக்கமளிக்கும்: ஐஜிபி
July 27, 2026, 5:05 pm
