செய்திகள் மலேசியா
ஆட்சிக் குழுவில் இரண்டு இந்தியர்கள் என்பதை நம்பிக்கை கூட்டணி ஏற்கனவே நிரூபித்துள்ளது: குணராஜ்
சிரம்பான்:
நெகிரி செம்பிலான் மாநில ஆட்சிக் குழுவில் இரண்டு இந்தியர்கள் என்பதை நம்பிக்கை கூட்டணி ஏற்கனவே நிரூபித்துள்ளது.
செந்தோசா சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் குணராஜ். இதனை கூறினார்.
நம்பிக்கை கூட்டணி அரசு, இந்திய சமூகத்தின் பிரதிநிதித்துவத்திற்கான தனது அர்ப்பணிப்பைத் தொடர்ந்து நிரூபித்து வருகிறது.
கடந்த 2018 முதல் நம்பிக்கை கூட்டணி நிர்வாகத்தின் கீழ் நெகிரி செம்பிலானில் இரண்டு இந்தியர்கள் ஆட்சிக் குழுவில் இருந்து வருகின்றன.
இது ஒரு புதிய தேர்தல் வாக்குறுதி அல்ல,
மாறாக ஏற்கனவே நம்பிக்கை கூட்டணியால் செயல்படுத்தப்பட்டு நிரூபிக்கப்பட்ட ஒன்றாகும்.
உண்மையில் சிலாங்கூர், பினாங்கு உட்பட நம்பிக்கை கூட்டணி ஆளும் அனைத்து மாநிலங்களிலும் இந்திய செயற்குழுப் பிரதிநிதிகள் உள்ளனர்.
கல்வி, தொழிற்கல்வி, திவேட், தொழில்முனைவு, மித்ரா முன்னெடுப்புகள், பொருளாதார மேம்பாடு ஆகியவற்றின் மூலம் உண்மையான வாய்ப்புகளை வழங்கும் அதே வேளையில், அர்த்தமுள்ள பிரதிநிதித்துவத்தை உறுதி செய்வதே எங்களின் முக்கிய நோக்கமாக இருந்து வருகிறது.
இந்திய சமூகம் வெறும் தேர்தல் வாக்குறுதிகளை அல்ல, நிரூபிக்கப்பட்ட செயல் பதிவுகளையே பெறத் தகுதியானது என்று குணராஜ் கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
July 27, 2026, 8:14 pm
அரச நிறுவனங்களை மதிப்பதுடன் 3ஆர் பிரச்சினைகளைத் தொடுவதைத் தவிர்க்க வேண்டும்: ஜாஹித்
July 27, 2026, 8:12 pm
முட்டைகள் வாங்கியபோது முகமூடி அணிந்த சந்தேக நபரால் சுடப்பட்டதில் ஆடவர் காயம்
July 27, 2026, 8:10 pm
ஒற்றுமையும் வேல் சக்தியும் இந்திய மாணவர்களின் கல்வி வெற்றிக்கு வழிகாட்டும்: சுரேன் கந்தா
July 27, 2026, 8:08 pm
அயோப் கானின் மரபு போலிஸ் அதிகாரிகளுக்கு தொடர்ந்து ஊக்கமளிக்கும்: ஐஜிபி
July 27, 2026, 5:05 pm
