நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் விளையாட்டு

By
|
பகிர்

மின்னல் வேகத்தில் பாய்ந்த உமார்: 400 மீட்டரில் புதிய மலேசிய தேசிய சாதனை

கோலாலம்பூர்: 

மலேசிய தடகள உலகில் மீண்டும் வரலாறு படைத்துள்ளார் தேசிய ஓட்டப்பந்தய வீரர் உமார் ஒஸ்மான். தைவான் ஓபன் தடகள சாம்பியன்ஷிப் போட்டியில், ஆடவர் 400 மீட்டர் ஓட்டத்தில் 45.73 வினாடிகளில் இலக்கை எட்டி புதிய தேசிய சாதனையைப் பதிவு செய்தார்.

ஜொகூரைச் சேர்ந்த 23 வயதான உமார், 2023-ஆம் ஆண்டு சீனாவின் செங்டுவில் நடைபெற்ற உலக பல்கலைக்கழக விளையாட்டுப் போட்டியில் தானே படைத்திருந்த 46.09 வினாடிகள் என்ற முந்தைய தேசிய சாதனையை முறியடித்து புதிய மைல்கல்லை எட்டியுள்ளார்.

இன்றைய இரண்டாவது தகுதிச்சுற்றில் ஏழாவது பாதையில் களமிறங்கிய உமார், ஆஸ்திரேலிய வீரர் பிரென்டன் கெர்ரின் கடும் சவாலை எதிர்கொண்ட போதிலும் அபார ஓட்டத்தை வெளிப்படுத்தினார்.

குறிப்பாக கடைசி 50 மீட்டரில் மின்னல் வேகத்தை வெளிப்படுத்திய அவர், போட்டியாளர்களைப் பின்னுக்குத் தள்ளி அசத்தலான சாதனையைப் பதிவு செய்தார்.

இது வெறும் தகுதிச்சுற்று போட்டியாக இருந்தாலும், தேசிய சாதனையைப் புதுப்பித்திருப்பது மலேசிய தடகளத்திற்கு பெருமை சேர்த்துள்ளது.

வரும் செப்டம்பரில் நடைபெறவுள்ள அய்ச்சி-நகோயா ஆசிய விளையாட்டுப் போட்டிக்கான முக்கிய வீரர்களில் ஒருவராகக் கருதப்படும் உமாருக்கு, இந்த வெற்றி புதிய தன்னம்பிக்கையையும் உற்சாகத்தையும் அளித்துள்ளது.

ஒரு சாதனையை உடைத்ததோடு மட்டுமல்லாமல், மலேசிய தடகளத்தின் எதிர்கால நம்பிக்கையாகவும் உமார் ஒஸ்மான் மீண்டும் தன்னை நிரூபித்துள்ளார்.

-சங்கீர்த்தனா 

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset