நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் விளையாட்டு

By
|
பகிர்

யூரோ 2028 போட்டிக்கு இங்கிலாந்து தகுதி பெற வேண்டும்

லண்டன்:

யூரோ 2028 கால்பந்து போட்டிக்கு இங்கிலாந்து அணி தகுதி பெற வேண்டும்.

ஒரே ஒரு போட்டியை மட்டுமே நடத்திய போதிலும், 2030 உலகக் கிண்ண ஏற்கனவே இடம் உறுதிசெய்யப்பட்ட அர்ஜெண்டினாவைப் போலல்லாமல்,

இங்கிலாந்து இணை ஏற்பாட்டாளராக இருந்தபோதிலும், யூரோ 2028இல் விளையாடுவதற்கு தகுதிச் சுற்றுப் போட்டிகளில் பங்கேற்க வேண்டியிருக்கும்.

2026 உலகக் கிண்ண போட்டியின் போது நடந்த தொடர்ச்சியான சர்ச்சைக்குரிய சம்பவங்களைத் தொடர்ந்து, வரவிருக்கும் போட்டியிலிருந்து அர்ஜெண்டினாவைத் தடை செய்யக் கோரி மில்லியன் கணக்கான ரசிகர்கள் மனுவில் கையெழுத்திட்ட பிறகு, இந்த முடிவு கால்பந்து ரசிகர்களிடமிருந்து விமர்சனங்களை ஈர்த்துள்ளது.

2030 உலகக் கிண்ண போட்டியை இணைந்து நடத்தும் நாடுகளான ஸ்பெயின், போர்த்துகல், மொராக்கோவிற்கு, இப்போட்டியில் நேரடியாக இடங்கள் வழங்கப்பட்டன.

மேலும், போட்டியின் 100ஆவது ஆண்டு விழா பதிப்புடன் இணைந்து தத்தமது நிகழ்வுகளின் தொடக்கப் போட்டியை மட்டுமே நடத்திய போதிலும், அர்ஜெண்டினா, உருகுவே, பராகுவே ஆகிய நாடுகளுக்கும் நேரடியாக இடங்கள் வழங்கப்பட்டது விவாதத்தைத் தூண்டியது.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset