செய்திகள் மலேசியா
ஜொகூர் மாநிலத் தேர்தலுக்கான வேட்பாளர்கள்; மஇகா, மசீச தலைவர்களுடன் நாளை விவாதிக்கப்படும்: ஜாஹித்
புத்ராஜெயா:
ஜொகூர் மாநிலத் தேர்தலுக்கான வேட்பாளர்களை இறுதி செய்ய மஇகா, மசீச தலைவர்களுடன் நாளை விவாதிக்கப்படும்.
தேசிய முன்னணி தலைவரும் துணைப் பிரதமருமான டத்தோஸ்ரீ ஜாஹித் ஹமிடி இதனை தெரிவித்தார்.
ஜொகூர் மாநில சட்டமன்றம் கலைக்கப்பட்டதை தொடர்ந்து விரைவில் தேர்தல் நடைபெறவுள்ளது.
இந்த தேர்தலில் தேசிய முன்னணி அனைத்து தொகுதிகளிலும் போட்டியிடவுள்ளது.
ஆக இந்த மாநிலத் தேர்தலுக்கான தேசிய முன்னணியின் வேட்பாளர்களை இறுதி செய்வதற்காக, நாளை கூட்டணிக் கட்சிகளுடன் சிறப்பு கூட்டம் நடைபெறும்.
ஜொகூர் தேசிய முன்னணி வேட்பாளர்களை கிட்டத்தட்ட இறுதி செய்யப்பட்டுவிட்டது.
நாளை நான் கூட்டணிக் கட்சிகளுடன், குறிப்பாக மஇகா, மசீச கட்சிகளுடன், அவர்கள் தத்தமது நிலைப்பாடுகளை இறுதி செய்வதற்காகக் கலந்துரையாடுவேன்.
அதன் பின் வேட்பாளர் பட்டியல் இறுதி செய்யப்படும் என்று ஜாஹித் கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
June 6, 2026, 9:38 pm
ஜொகூர், நெகிரி செம்பிலான் மாநிலத் தேர்தல்களில் பெர்சமா கட்சி போட்டியிடும்: ரபிசி
June 6, 2026, 9:36 pm
கெடிலான் உதவித் தலைவர்களாக சைபுடின், ஜலேஹா நியமனம்
June 6, 2026, 6:10 pm
15 நாட்கள் மர்மமாக மாயம்: இறுதியில் உயிருடன் கண்டுபிடிக்கப்பட்ட ஜாஸ்லிண்டா
June 6, 2026, 5:12 pm
மீன்பிடிக்கச் சென்ற சிறுவர்களுக்கு அதிர்ச்சி: வடிகாலில் ஆடவரின் சடலம் கண்டெடுப்பு
June 6, 2026, 2:38 pm
மாராவின் திவேட் கல்வி திட்டம் கிட்டத்தட்ட 100 சதவீத வேலை வாய்ப்பை எட்டியுள்ளது: ஜாஹித்
June 6, 2026, 1:30 pm
