நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

நெகிரி செம்பிலான் தேர்தல்: அரண்மனை அரசியல் கட்சிகளின் கட்டுப்பாட்டில் இருப்பதாகக் கூறும் காணொளி குறித்து போலிஸ் விசாரணை

சிரம்பான்:

அரண்மனை இப்போது ஒரு அரசியல் கட்சியால் கட்டுப்படுத்தப்படுகிறது என்று ஒருவர் அறிக்கை வெளியிடுவதைக் காட்டும் காணொளிக் காட்சி தொடர்பாக போலிஸ் ஒரு விசாரணை அறிக்கையைத் தொடங்கியுள்ளது.

1954ஆம் ஆண்டு தேர்தல் குற்றங்கள் சட்டத்தின் பிரிவு 4ஏ(1), தண்டனைச் சட்டத்தின் பிரிவு 505(பி), 1998ஆம் ஆண்டு தகவல் தொடர்பு, பல்லூடகச் சட்டத்தின் பிரிவு 233 ஆகியவற்றின் கீழ் இந்த விசாரணை அறிக்கை தொடங்கப்பட்டது.

டிக்டாக் செயலி வழியாகப் பதிவேற்றப்பட்ட ஒரு காணொளிப் பதிவு குறித்த புகார் கிடைத்ததை நெகிரி செம்பிலான் போலிஸ் உறுதிப்படுத்தியுள்ளது.

நெகிரி செம்பிலானின் அரச அமைப்பு ஒரு அரசியல் கட்சியால் கட்டுப்படுத்தப்படுகிறது என்ற தோற்றத்தை அளிக்கும் ஒரு அறிக்கை அதில் இருப்பதாகக் கூறப்படுகிறது என்று அவர் இன்று ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset