நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

நீலாய் சட்டமன்றத் தொகுதியில் பெர்சத்து வேட்பாளர் டத்தோ சரவணக்குமாரின் வெற்றியை மக்கள் உறுதி செய்ய வேண்டும்: டான்ஸ்ரீ மொஹைதின்

நீலாய்:

நீலாய் சட்டமன்றத் தொகுதியில் பெர்சத்து கட்சி வேட்பாளர் டத்தோ சரவணக்குமாரின் வெற்றியை மக்கள் உறுதி செய்ய வேண்டும்.

பெர்சத்து கட்சியின் தலைவர் டான்ஸ்ரீ மொஹைதின் யாசின் இதனை கூறினார்.

நெகிரி செம்பிலான் மாநிலத் தேர்தல் வரும் சனிக்கிழமை நடைபெறவுள்ளது.

இத்தேர்தலுக்கான இறுதிக்கட்ட பிரச்சாரங்கள் தற்போது நடைபெற்று வருகின்றன.

இந்த தேர்தலில் நீலாய் சட்டமன்றத் தொகுதியில் பெர்சத்து கட்சியின் வீ. சரவணக்குமார் போட்டியிடுகிறார்.

இந்நிலையில் பெர்சத்து கட்சியின் தேசியத் தலைவர் டான்ஸ்ரீ மொஹைதின் யாசின் அவருக்கு ஆதரவாக பிரச்சாரங்களை மேற்கொண்டார்.

அப்போது நீலாய் தொகுதியில் டத்தோ சரவணக்குமார் நீண்ட காலமாக சேவையாற்றி வருகிறார்.

குறிப்பாக இனம், மொழி பாராமல் அனைத்து மக்களுக்கும் அவர் உரிய சேவைகளை செய்து வருகிறார்.

ஆகவே வரும் தேர்தலில் நீலாய் வட்டார மக்கள் டத்தோ சரவணக்குமாருக்கு வாக்களிக்க வேண்டும்.

குறிப்பாக அவரின் வெற்றியை இத்தொகுதி மக்கள் உறுதி செய்ய வேண்டும் என்று டான்ஸ்ரீ மொஹைதின் யாசின் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset