நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

ஜசெக மாநாடு ஒத்திவைத்தது; ஜொகூர், நெகிரி செம்பிலான் தேர்தல்களில் அனைத்து தொகுதிகளையும் ஜசெக தற்காக்கும்: அந்தோனி லோக்

கோலாலம்பூர்:

ஜொகூர், நெகிரி செம்பிலான் மாநிலத் தேர்தல்களில் ஜசெக அனைத்து தற்போதைய இடங்களையும் தக்கவைத்துக் கொள்ளும்.

அத்துடன் ஜொகூரில் உள்ள பல கூடுதல் இடங்களிலும் போட்டியிட ஜசெக இலக்கு கொண்டுள்ளது என்று அதன் பொதுச் செயலாளர் அந்தோனி லோக் கூறினார்.

கூடுதல் இடங்களின் உண்மையான எண்ணிக்கை குறித்த முடிவு, நம்பிக்கை கூட்டணிக் கட்சிகளுடனான இறுதிப் பேச்சுவார்த்தைகள் நடத்தப்படும்.

அதன் பின் அவை இந்த வார இறுதிக்குள் நிறைவடையும் என எதிர்பார்க்கப்படுவதாக அவர் கூறினார்.

ஜசெக மத்திய செயற்குழு தனது மாதாந்திரக் கூட்டத்தை நேற்று இரவு நடத்தி, பல நிலைப்பாடுகளை முடிவு செய்தது.

ஜொகூர், நெகிரி செம்பிலான் மாநில சட்டமன்றங்கள் கலைக்கப்பட்டதையும், ஜூன் 1, 2026 முதல் 60 நாட்களுக்குள் தேர்தல் நடத்தப்பட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.

இந்த அவசியத்தையும் கருத்தில் கொண்டு, ஜூலை 12ஆம் தேதி நடைபெறவிருந்த ஜசெக தேசிய மாநாடு ஆகஸ்ட் 16ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்படும் என்ன்று அவர் தெரிவித்தார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset