நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் இந்தியா

By
|
பகிர்

இந்தியாவை வாட்டி வதைக்கும் வெப்பம்: தெலங்கானா வெயிலில் 16 பேர் பலி

ஹைதராபாத்:

இந்தியாவின் தெலங்கானா மாநிலத்தில் கடும் வெப்பத்தால் 16 பேர் உயிரிழந்துள்ளனர்.

இந்தியாவின் சில மாநிலங்களில் கடந்த சில நாள்களாகக் கடுமையான வெப்பம் ஏற்பட்டு வருகிறது.

தெலங்கானாவின் 7 மாவட்டங்களில் 16 பேர் உயிரிழந்ததாக மாநில அரசு தெரிவித்தது.

சில நகரங்களில் 45 டிகிரி செல்சியஸுக்கு மேல் வெப்பம் சீறுகிறது.

இந்நிலையில் தெலங்கானாவின் தலைமைச் செயலகத்தில் வருவாய்த்துறை அமைச்சர் பொங்குலேட்டி ஸ்ரீநிவாஸ் ரெட்டி (Ponguleti Srinivasa Reddy) தலைமையில் அவசர ஆலோசனைக் கூட்டம் நடைபெற்று வருகிறது.

வெயிலின் தாக்கம் மிதமிஞ்சிய அளவுக்குச் சென்றுவிட்டது என்றும் மாநிலம் முழுவதும் விழிப்புநிலை தேவை என்றும் அமைச்சர் கூறினார்.

ஆர்யன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset