செய்திகள் இந்தியா
ஐரோப்பிய மனித உரிமைகள் நீதிமன்றத்திலும் மனு தள்ளுபடி: நீரவ் மோடியை இந்தியாவுக்கு நாடுகடத்த தீவிரம்
பாரிஸ்:
பஞ்சாப் நேஷனல் வங்கி மோசடி வழக்கில் தேடப்பட்டு வரும் பிரபல வைர வியாபாரி நீரவ் மோடியை இந்தியாவுக்கு நாடு கடத்துவதற்கான இறுதிக்கட்ட பணிகள் தீவிரமடைந்துள்ளன.
ரூ.14,000 கோடிக்கும் அதிகமான பிஎன்பி வங்கி மோசடி, சட்டவிரோத பணப் பரிமாற்ற வழக்குகளில் நீரவ் மோடி முதன்மை குற்றவாளி என நிரூபிக்கப்பட்டுள்ளார். கடந்த 2019-ம் ஆண்டு மார்ச் மாதம் லண்டனில் கைது செய்யப்பட்ட நீரவ் மோடி, அங்குள்ள வாண்ட்ஸ்வொர்த் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
அவரை இந்தியாவுக்கு நாடு கடத்த பிரிட்டன் உள்துறை அமைச்சகம் ஒப்புதல் அளித்ததை எதிர்த்து, அவர் அங்குள்ள பல்வேறு நீதிமன்றங்களில் தொடர்ந்த வழக்குகள் தள்ளுபடி செய்யப்பட்டன. இறுதியாக கடந்த ஏப்ரல் மாதத்தில் நீரவ் மோடி பிரான்ஸ் நாட்டின் ஸ்ட்ராஸ்பர்க் நகரில் உள்ள ஐரோப்பிய மனித உரிமைகள் நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனுவை தாக்கல் செய்தார்.
விசாரணையின்போது, இந்தியாவுக்கு அனுப்பப்பட்டால் தான் சித்திரவதைக்கு உள்ளாக்கப்படலாம் என்றும், இந்திய சிறைச்சாலைகளின் தரம் மோசமாக இருப்பதாகவும் நீரவ் மோடி தரப்பில் வாதிடப்பட்டது. எனினும், நீரவ் மோடியின் மனு தள்ளுபடி செய்யப்பட்டது. எனவே, எந்த நேரத்திலும் நீரவ் மோடி இந்தியாவுக்குக் அழைத்து வரப்படலாம் என்று கூறப்படுகிறது.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
July 7, 2026, 12:55 pm
இந்தோனேசியாவில் மோடிக்கு உற்சாக வரவேற்பு
July 4, 2026, 5:32 pm
மும்பையில் கனமழை: சிவப்பு எச்சரிக்கை விடப்பட்டுள்ளது
June 29, 2026, 5:59 pm
அயோத்தி ராமர் கோயில் உண்டியல் பணம் திருட்டு: பண்ணை வீடு, கார் என ஆடம்பரமாக வாழ்ந்த ஊழியர்
June 29, 2026, 4:08 pm
ஜம்முவில் கனமழை, மண்சரிவால் சிக்கித்தவிக்கும் நூற்றுக்கணக்கான வாகனங்கள்
June 29, 2026, 10:31 am
