நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் இந்தியா

By
|
பகிர்

மும்பையில் கனமழை: சிவப்பு எச்சரிக்கை விடப்பட்டுள்ளது

மும்பை: 

மும்பைக்கும் தானே மாவட்டங்களுக்கும் ஜூலை 4, 5, 6 ஆகிய தேதிகளில் அதி கனமழைக்கான 'ரெட் அலர்ட்' எச்சரிக்கையை இந்திய வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ளது. 

இதனைத் தொடர்ந்து, தானே மாவட்டம், கல்யாண்-டோம்பிவ்லி நகராட்சிப் பகுதிகளில் உள்ள பள்ளிகள் கல்லூரிகளுக்கு இன்று (ஜூலை 4) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

மும்பை, தானே, பால்கர், ராய்காட், ரத்னகிரி,சிந்துதுர்க் மாவட்டங்களுக்கு ஜூலை 4-ஆம் தேதிக்கான 'ரெட் அலர்ட்' எச்சரிக்கையை மும்பை வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ளது. 

மேலும், ஜூலை 5, 6 ஆகிய தேதிகளிலும் இந்தக் கடலோர மாவட்டங்களுக்கு 'ரெட் அலர்ட்' எச்சரிக்கை தொடர்கிறது. இப்பகுதிகளில் பல இடங்களில் கனமழை முதல் மிக அதிகனமழை வரை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

- ஆர்யன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset