செய்திகள் இந்தியா
மும்பையில் கனமழை: சிவப்பு எச்சரிக்கை விடப்பட்டுள்ளது
மும்பை:
மும்பைக்கும் தானே மாவட்டங்களுக்கும் ஜூலை 4, 5, 6 ஆகிய தேதிகளில் அதி கனமழைக்கான 'ரெட் அலர்ட்' எச்சரிக்கையை இந்திய வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ளது.
இதனைத் தொடர்ந்து, தானே மாவட்டம், கல்யாண்-டோம்பிவ்லி நகராட்சிப் பகுதிகளில் உள்ள பள்ளிகள் கல்லூரிகளுக்கு இன்று (ஜூலை 4) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
மும்பை, தானே, பால்கர், ராய்காட், ரத்னகிரி,சிந்துதுர்க் மாவட்டங்களுக்கு ஜூலை 4-ஆம் தேதிக்கான 'ரெட் அலர்ட்' எச்சரிக்கையை மும்பை வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ளது.
மேலும், ஜூலை 5, 6 ஆகிய தேதிகளிலும் இந்தக் கடலோர மாவட்டங்களுக்கு 'ரெட் அலர்ட்' எச்சரிக்கை தொடர்கிறது. இப்பகுதிகளில் பல இடங்களில் கனமழை முதல் மிக அதிகனமழை வரை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
July 12, 2026, 11:56 am
மட்டன் பிரியாணி போடாமல் சிக்கன் பரிமாறியதால் மோதல்: பிஹார் திருமணத்தில் 12 பேர் காயம்
July 11, 2026, 7:20 pm
ஆல்கஹால் கலந்த இருமல் மருந்துகளுக்கு புதிய கட்டுப்பாடு: இந்திய சுகாதார அமைச்சகம் அறிவிப்பு
July 11, 2026, 1:29 pm
அமர்நாத் குகைக் கோயில் பனிலிங்கம் சுமார் 90 சதவீதம் வரை உருகி ஓடுகிறது
July 9, 2026, 10:42 am
பயணத்தோடு ஒரு தேனிலவு: முதல் இரவு அறைபோல் மாற்றப்பட்ட ரயில் பயணப் பெட்டி
July 8, 2026, 3:28 pm
மும்பையில் கனமழை; 1,100-க்கும் மேற்பட்ட மரங்கள் வேரோடு சாய்ந்தன: விமான சேவைகள் பாதிப்பு
July 8, 2026, 7:26 am
வய நாடு நிலச்சரிவில் சிக்கி இதுவரை 3 பேர் உயிரிழந்துள்ளனர்: இன்றும் கன மழைக்கு வாய்ப்பு
July 7, 2026, 12:55 pm
