செய்திகள் இந்தியா
புனேவில் 3 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்த 65 வயது நபருக்கு தூக்கு தண்டனை: சிறப்பு விரைவு நீதிமன்றம் தீர்ப்பு
புனே:
புனேவில் 3 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்த 65 வயது நபருக்கு தூக்கு தண்டனை சிறப்பு விரைவு நீதிமன்றம் வழங்கியுள்ளது.
கடந்த மே 1ஆம் தேதி இச்சம்பவம் நடந்த நிலையில், 60 நாட்களுக்குள் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. குற்றவாளி ஏற்கனவே 2 வழக்குகளில் இருந்து தப்பியதாக தெரிவித்த நீதிபதி, அவரிடம் குற்ற உணர்ச்சியோ, திருந்துவதற்கான அறிகுறியோ தெரியவில்லை எனக்கூறி இந்த தீர்ப்பை வழங்கியுள்ளார்.
மகாராஷ்டிராவின் புனே மாவட்டம், நஸ்ராபூர் கிராமத்தை சேர்ந்தவர் பீமராவ் காம்ப்ளே. அவருக்கு 65 வயது. இவர் கடந்த மே 1ஆம் தேதி தாய் வழி உறவினர் வீட்டுக்கு வந்திருந்த 3 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்துள்ளார். பிறகு சிறுமியை குடும்பத்தினர் தேடிய போது அவரது உடல் மாட்டுத் தொழுவத்தில் கண்டெடுக்கப்பட்டது.
குற்றவாளிக்கு கடும் தண்டனை வழங்க வேண்டும் என்று உள்ளூர் மக்கள் கோரினர். இதனையடுத்து சம்பவம் நடந்த அன்றே குற்றவாளி பீமராவ் காம்ப்ளேவை போலீசார் கைது செய்தனர்.
சிறப்பு நீதிமன்றம் தற்போது முதியவர் காம்ப்ளேவை குற்றவாளி என அறிவித்துள்ளது. இந்நிலையில் முதியவருக்கு நேற்று மரண தண்டனை விதித்து சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு அளித்தது.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
June 29, 2026, 5:59 pm
அயோத்தி ராமர் கோயில் உண்டியல் பணம் திருட்டு: பண்ணை வீடு, கார் என ஆடம்பரமாக வாழ்ந்த ஊழியர்
June 29, 2026, 4:08 pm
ஜம்முவில் கனமழை, மண்சரிவால் சிக்கித்தவிக்கும் நூற்றுக்கணக்கான வாகனங்கள்
June 29, 2026, 10:31 am
கைலாஷ்-மானசரோவா் யாத்ரிகா்களுக்கு இந்திய வெளியுறவு அமைச்சகம் எச்சரிக்கை
June 28, 2026, 4:04 pm
அயோத்தி ராமர் கோவிலைத் தொடர்ந்து மதுரா கிருஷ்ணர் கோயிலிலும் காணிக்கை திருட்டு
June 27, 2026, 7:02 pm
“மேற்கு வங்கத்தில் கட்டாய மதமாற்ற தடைச் சட்டம் கொண்டுவரப்படும்”: முதல்வர் சுவேந்து அதிகாரி
June 26, 2026, 11:34 am
இந்திய பாஸ்போர்ட் கட்டணம் அதிரடியாக உயர்வு: ஜூலை 1 முதல் அமல்
June 25, 2026, 3:00 pm
