நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் இந்தியா

By
|
பகிர்

புனேவில் 3 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்த 65 வயது நபருக்கு தூக்கு தண்டனை: சிறப்பு விரைவு நீதிமன்றம் தீர்ப்பு

புனே:

புனேவில் 3 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்த 65 வயது நபருக்கு தூக்கு தண்டனை சிறப்பு விரைவு நீதிமன்றம் வழங்கியுள்ளது. 

கடந்த மே 1ஆம் தேதி இச்சம்பவம் நடந்த நிலையில், 60 நாட்களுக்குள் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. குற்றவாளி ஏற்கனவே 2 வழக்குகளில் இருந்து தப்பியதாக தெரிவித்த நீதிபதி, அவரிடம் குற்ற உணர்ச்சியோ, திருந்துவதற்கான அறிகுறியோ தெரியவில்லை எனக்கூறி இந்த தீர்ப்பை வழங்கியுள்ளார்.

மகாராஷ்டிராவின் புனே மாவட்டம், நஸ்ராபூர் கிராமத்தை சேர்ந்தவர் பீமராவ் காம்ப்ளே. அவருக்கு 65 வயது.  இவர் கடந்த மே 1ஆம் தேதி தாய் வழி உறவினர் வீட்டுக்கு வந்திருந்த 3 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்துள்ளார். பிறகு சிறுமியை குடும்பத்தினர் தேடிய போது அவரது உடல் மாட்டுத் தொழுவத்தில் கண்டெடுக்கப்பட்டது. 

குற்றவாளிக்கு கடும் தண்டனை வழங்க வேண்டும் என்று உள்ளூர் மக்கள் கோரினர். இதனையடுத்து சம்பவம் நடந்த அன்றே குற்றவாளி பீமராவ் காம்ப்ளேவை போலீசார் கைது செய்தனர். 

சிறப்பு நீதிமன்றம் தற்போது முதியவர் காம்ப்ளேவை குற்றவாளி என அறிவித்துள்ளது. இந்நிலையில் முதியவருக்கு நேற்று மரண தண்டனை விதித்து சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு அளித்தது.

- ஆர்யன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset